Friday 1 September 2017

அன்புத்தங்கை அனிதாவுக்கு இந்த அண்ணனின் இறுதி அஞ்சலி..


வருந்துகிறேன்.....😂😂😂
உன் மருத்துவர் கனவு
காற்றோடு கரைந்து போனதற்காக.

இந்த மனநிலை கெட்ட ஆட்சியாளர்களால்...நீ
இந்த மண்ணை விட்டு
மறைந்தாயோ..

இந்த மண்ணை விட்டு
நீ பிரிந்தாலும்...
எங்கள் மனதைவிட்டு
பிரிவாயோ...

வாழ்வாய் நீ....
நீடோடி.
இந்த தமிழ் இனம்
இருக்கும் வரை.

நீ மருத்துவம் படிக்காவிட்டாலும், எங்களைப் பொறுத்துவரை
நீ இன்று
மருத்துவர் அனிதா தான்.

உன் மரணமாவது
இந்த மதிகெட்ட மந்திரிமார்களின் மனசை தட்டி எழுப்புமா....?

காலத்தின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

இன்று நீ எதற்காக
உயிர் துறந்தாயோ....
அந்த எண்ணம் ஈடேறட்டும்.

No comments:

Post a Comment