Tuesday 15 November 2016

இயற்கை மருந்து-கற்றாழை


நம் வீட்டை சுற்றி வளரும் இயல்பான
செடி தான் கற்றாழை.
இது அஸ்ஃபோடெலிசீ தாவர குடும்பத்தை சேர்ந்தது.தண்டுகள் இல்லாத கற்றாழை செடிகளும் உண்டு.இது தரையிலிருந்து நேரடியாக ரோஜா இதழ் போன்ற அமைப்பில் வளரும் தன்மை உடையது.
வெவ்வேறு நிறங்களிலும் இவை காணப்படக்கூடியவை.

கற்றாழையில் கேப் கற்றாழை,
சோகோடிரைன் கற்றாழை, பார்படாஸ் கற்றாழை,குர்குவா கற்றாழை, ஸான்ஸிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை,நேட்டல் கற்றாழை மற்றும் ஜஃபராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவை.

இவையே தமிழில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் கற்றாழை, செங்கற்றாழை, இரயில் கற்றாழை எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஆப்பிரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த கற்றாழை இன்று இந்தியா,
பாகிஸ்தான்,வங்காளதேசம்,
பார்படோ தீவுகள்,சீனா,இத்தாலி,
வெனிசுலா,தென்னாப்பிரிக்கா,கிரீஸ் போன்ற பல நாடுகளில் அபரிமிதமாக இயல்பாகவும்,வணிக ரீதியாகவும் விளைவிக்கப்படுகிறது.

ஒரு சில ஆப்ரிக்க நாடுகளில் கற்றாழை மரமாக வளர்கிறது.


இதற்கு கன்னி,குமரி என்று பொதுவான சொல்வழக்கில் பெயர்கள் பல உண்டு.

இது வளர குறைந்த அளவு தண்ணீரே போதுமானது.ஆகவே தான் வறட்சி மிகுந்த நம் நாட்டில் இயல்பாக வளர்கிறது.

குறிப்பாக கிராம பகுதிகளில் தண்ணீர் ஊற்றாமலேயே சர்வ சாதாரணமாக வளர்ந்து காணப்படும்.ரயில் பாதை மற்றும் வயல்வெளி ஓரங்களில் இயல்பாக நீங்கள் காணமுடியும்.

நகரங்களில் பெரும்பாலும்
அழகிற்காக மற்றும் பாம்புகள் வீட்டை அண்டாமல் இருப்பதற்காக ஒருவகை தண்டு மெலிதாக இருக்கும் கற்றாழையை வளர்க்கிறார்கள்.


இன்றும் கூட இந்த செடியை விவரம் தெரிந்தவர் தவிர ஒருவரும் சீண்டுவாரில்லை.
ஆனால் அதுவே வெவ்வேறு வடிவங்களில் கற்றாழையை முன்னிலைப்படுத்தி வருகிற சோப்பு மற்றும் அழகுசாதனப்பொருள்கள் முதலியனவற்றை விலை கொடுத்து
வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

என்ன செய்றது....இது தானே நம் மக்கள் இயல்பு.

இதே இந்தியாவில் தான் இன்று முழுக்க முழுக்க வணிகரீதியாக தரமான கற்றாழையை பயிரிட்டு பணம் பார்ப்போர் பலரும் உண்டு.

இது இயல்பாக கசக்கும் தன்மை கொண்டதால் பெரும்பாலானோர் விரும்பி மருந்தாகவோ,உணவாகவோ எடுத்துக்கொள்வதில்லை.

சரி.....அப்ப எப்படி தான் பயன்படுத்துறது...?

காற்றாழைகளில் சிறப்புமிக்கது சோற்றுக்கற்றாழை.இதன் தண்டை நன்கு கழுவிவிட்டு கனமான மேல் தோலை சீவினால் வழவழப்பான ஜெல் போன்ற கூழ்மபொருள் கிடைக்கும்.
அதனை நீங்கள் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாக பல இயற்கையான பொருள்களுடன் கலந்தோ உண்ணலாம் அல்லது பயன்படுத்தலாம்.

இதுமட்டுமல்லாது பூ , மடல் மற்றும் வேர் ஆகியனவும் மருத்துவ குணம் மிக்கவையே.


காற்றாழையில் என்ன இருக்குனு பார்க்கலாம்...

பார்பலோயின்
அலோ எமோடின்
முசபார்
அலோஸோன்
அலாய்ன்
ஆலோக்டின்பி
ஆந்த்ரோகுயினோன்
குயினோன்
பார்பலின்
நட்டாலியன்
பென்டோசைட்ஸ்
ரெசின்
சப்போனின்
கால்சியம்
குளோரின்
சோடியம்
பொட்டாசியம்
மாங்கனீசு
ஜிங்க்
ஜெர்மானியம்
வைட்டமின்-C
வைட்டமின்-A
வைட்டமின்-E
வைட்டமின்-பி1
வைட்டமின்-பி2
வைட்டமின்-பி6
வைட்டமின்-பி12
பாலிசாக்கரைடு
யூரிக் அமிலம்

நமக்கு அப்படி என்ன உதவி செய்கிறது...?

வலி நிவாரணியாக.....
சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கிறது...
அழகுச் சாதனங்கள் தயாரிக்க...
மருந்துப் பொருட்கள் தயாரிக்க...
கதிர் வீச்சுகளின் விளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கிறது...
சவரம் செய்வதற்கான கூழ்மங்கள் தயாரிக்க...
ஷாம்பூ தயாரிக்க...
மலமிளக்கி
வெட்டுக்காயம்
இருமல்
சளி
அலர்ஜி
வயிற்றுப்புண்
மாதவிலக்கு பிரச்சனை
குடல்புண்
சோரியாசிஸ்
பூச்சிக்கடி
நெஞ்செரிச்சல்
பொடுகு பிரச்சனைக்கு...
மூட்டு வலி
சர்க்கரை நோயிற்கு மருந்தாக..
பல் தொடர்பான நோயிற்கு மருந்தாக..
வைரல் நோய்த்தொற்றுக்கு மருந்தாக...
என பலவிதங்களில் மருந்தாக நமக்கு
பயனாகிறது.

பாருங்க மக்களே....
நம்மைச்சுற்றி வளரும் கற்றாழையின் மகத்துவத்தை, இந்த இயற்கை மருந்து பதிவின் மூலம் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த பதிவில் மற்றொரு இயற்கை மருந்து பற்றி சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்....

2 comments: