மக்களே.......
நம் நாட்டின் தலைநகரம் டெல்லி மாசுக்குள் மறைந்து கிடப்பதை
பார்த்தீர்களா....
நாளை நம் சென்னை கூட இப்படி
ஒரு நிகழ்வை சந்திக்க நேரிடலாம்.
அதற்கு முன்,
நாம் அனைவரும் வாரத்தில் இரு நாள் மட்டும் மிதிவண்டி அல்லது காற்றை மாசு படுத்தாத வாகனங்களை பயன்படுத்தலாம்.
ஏன் அவசியம் ஏற்பட்டால்,
குறைந்த தூரம் என்றால் நடந்தே செல்லலாம்.
இது அனைத்து மக்களும் பின்பற்றினால் கொஞ்ச நாள் இந்த காற்று மாசு பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம்.
இல்லை என்றால்......
ஆளாளுக்கு இப்ப தண்ணீரை பாட்டிலில் அடைத்து விற்கிறது மாதிரி,காற்றையும் பாட்டிலில் அடைத்து காசு பார்க்க ஆரம்பிச்சிருவானுங்க;
அதோடு முகமூடியையும் சேர்த்து வித்துருவானுங்க பார்த்துகோங்க...
காசு நம்மிடம் நிறைய இருக்கிறது என்று மார்தட்டி கொள்பவர் நீங்கள்
என்றால்,உங்கள் ஊரில் ஏழைகளும் இருக்கிறார்கள் அவர்களும் மூச்சு விட வேண்டும்.
ஆகவே,அந்த ஏழை மக்களை பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள் பணக்கார பங்காளிகளே.....
நாம் தண்ணீர் கூட இல்லாமல் சில நாள்கள் வாழலாம்;
ஆனால் சுத்தமான காற்று இல்லாமல்..... யோசித்து பாருங்கள்....
நெஞ்சு பதறுகிறது..
No comments:
Post a Comment