Friday 18 November 2016

இயற்கை மருந்து-நொச்சி


நொச்சி என்றதும் நம் நினைவுக்கு வருது கொசுக்கள்.

என்னடா.....கொசுக்களுக்கும்
இதற்கும் என்ன தொடர்பு என கேட்குறீங்களா.....?

ஆமாங்க....
கொசுக்களின் எமன் என்றால்
நொச்சி தான்.ஓட ஓட விரட்டும்.

அதையும் மீறி தன் மேல் உட்காரும் கொசுக்களை மலடாக்கி வீரியம் இழக்க செய்யும் வல்லமை மிக்கவை.

மேலும் பல்வேறு பூச்சிகளை வீட்டில் மட்டுமல்லாது,தானியங்களையும் அண்டவிடாது செய்யும் சக்திமிக்கது.

இத்தகைய நொச்சி மனிதனை கொசுக்களிடம் இருந்து மட்டுமல்ல, பல்வேறு நோய்களிடம் இருந்து காப்பாற்றுகிறது என்றால் நம்பமுடிகிறதா....?

நம்புங்கள்........அதானே உண்மை.

நொச்சி (Vitex negundo) செடி
என்பது இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் பரந்துபட்டு கிடக்கின்றது.குறிப்பாக இந்த செடி இயல்பாக நீர்நிலைகள், காட்டுப்பகுதிகள்,வயல்வெளி
ஓரங்கள்,சாலை ஓரங்கள் என அனைத்துப்பகுதிகளிலும்
காணமுடியும்.இவை புதர்செடியாகவும், சிறிய மரமாகவும் வளரும் தன்மை கொண்டவை.

விவரம் தெரிந்தவர்கள் இதனை
பயன்படுத்தி உடலினை பல்வேறு நோயில் இருந்து தற்காத்து கொள்கிறார்கள்.

விவரம் தெரியாதவர்கள் இன்னும்
உடலுக்கு ஒவ்வாத மாத்திரைகளையும்,
செயற்கை  கொசு விரட்டிகளையும் பயன்படுத்தி மேலும் உடலை பாழ்படுத்தி கொள்கிறார்கள்.

இவற்றின் முழு உடல் பாகங்களும், அதாவது வேர்,தண்டு,விதை,பூ,கனி உட்பட அனைத்தும் மனிதனுக்கு பயனுள்ளவை என்பதனை ஒருபோதும் மறக்காதீர்கள்.


என்ன வேதிப்பொருள்கள் இந்த செடியில் இருக்கு.......

காஸ்டிஸின்
ஐஸோ ஓரியென்டின்
லுடியோலின்
சபினேனே
லினாலூல்
கிரிஸோபினோல்-D
லைனோலியிக் அமிலம்
ஒலியிக் அமிலம்
பால்மிடிக் அமிலம்
பிரஃக்டோஸ்
பி-ஹைட்ரொபென்சோயிக் அமிலம்
நெகுண்டோசைடு
கரோட்டின்
குளுகோசைடு
குக்குபின்
நிசிண்டாசைடு
வைட்டமின்-c
குளோபுலால்
ஆல்பா-குஆயினே

எதற்கு இது மருந்தாகிறது........?

காய்ச்சல்
தலைவலி
சளி
காசநோய் புண்கள்
காலரா
வயிற்றுப்போக்கு
கல்லீரல் நோய்கள்
வயிற்றுவலி
பசியின்மை
கணைய வீக்கம்
குடல்வலி
கண்நோய்
ஆஸ்துமா
மூச்சுக்குழல் அலற்சி
வீக்கங்கள்
வெண்குஷ்டம்
தோல்வியாதி
சிறுநீர்ப்பை எரிச்சல்
மூட்டுவலி
நீர்க்கோர்வை
மாதவிடாய் கோளாறுகள்
பால்வினை நோய்கள்
நாள்பட்ட புண்கள்

மேலும் இந்த செடி, நம் உடலுக்கு குளிர்ச்சி தருவதாக,கிருமி நாசினியாக,தலைமுடி வளர்தலை ஊக்குவிப்பானாக,குடல்
பூச்சிக்கொல்லியாக மற்றும் பூச்சிவிரட்டியாகவும் பயன்படுகிறது.

எப்படி பயன்படுத்துறாங்க நம் மக்கள்......?

நொச்சி இலை சாற்றை ஏதோ ஒரு எண்ணையுடன் சேர்த்து காய்ச்சி,பின் உடம்பில் தேய்த்து தங்கள் உடல் வலி போக்குகிறார்கள்.

சூடான நீரில் இதன் இலையை போட்டு அல்லது இதன் இலைச்சாற்றை விட்டு ஆவி பிடிக்கிறார்கள்.

கொசுவை விரட்ட வீட்டு வாசல்களில் வளர்க்கிறார்கள்.மேலும் குப்பைமேனி போன்ற மற்ற இயற்கை செடிகளோடு சேர்த்து பேஸ்ட்டாக அரைத்து அதனை கொசுவிரட்டும் வில்லைகளாக பயன்படுத்திகிறார்கள்.

ஒருசில இடங்களில் பூண்டுடன் இதனை சேர்த்து,அரைத்து பூச்சி விரட்டியாக பயன்படுத்துகிறார்கள்.

எது எப்படியோ.....
நம் வீட்டை சுற்றி இந்த செடியை வளர்த்தால் நம்மை பூச்சிகளிடம் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

அதனை இன்றே செய்வோமாக.....

சரி நண்பர்களே......
இந்த இயற்கை மருந்து பகுதி வாயிலாக நொச்சி செடியின் மகத்துவத்தை கொஞ்சம் அறிந்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த பதிவில் மற்றொரு செடியின் மகத்துவத்தை சொல்கிறேன்..

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்....


No comments:

Post a Comment