Wednesday 9 November 2016

மக்கள் கவனத்திற்கு.....



மோடி அதிரடியான அறிவிப்பு யாரை பாதித்ததோ இல்லையோ அடித்தட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளது என்பதற்கு ATM வாசலில் நிற்கும் மக்களே சாட்சி.

கையில் காசு இருந்தும் எந்த பொருள்களையும் வாங்க முடியாமல் தவிப்பதை காணமுடிகிறது.

சில்லறை மாற்றுவதற்காக
பிச்சைக்காரர்களை தேடி அலையவேண்டி இருக்கிறது.

பலர் வெளியில் செல்லமுடியாமல் வீட்டிலியே முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவுகிறது.

இவ்வளவு பிரச்சினைகளுக்கும் நடுவே நாளை முதல் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை பெற்று கொள்ளலாம் என்று நேற்று அறிவித்தது ரிசெர்வ் வங்கி.

இன்று புதிதாக ஒரு முத்தாய்ப்பான அறிவிப்பினை ரிசெர்வ் வங்கி
வெளியிட்டுள்ளது.அதன்படி மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை தவிர்க்கும் பொருட்டு இந்த வார சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வங்கி எப்பொழுதும் போல் செயல்படும் என அறிவித்துள்ளது.

ஆகவே மக்கள் இந்த வசதியினை
அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.

எது எப்படியோ இது போன்ற சிரமங்களை சந்திப்பது என்னவோ சாமான்ய மக்களே.......

நாட்டின் நலன்களுக்காக கொஞ்சம்
பொறுத்தருள்வோம்.

No comments:

Post a Comment