Tuesday 8 November 2016

செல்லாது..........செல்லாது........


மேலே உள்ள படத்தை ஒரு தடவை கடைசியா பார்த்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் இன்று முதல் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அரசு அழிக்க உள்ளதாகவும், எனவே அந்த ரூபாய் நோட்டுக்கள் இனி செல்லாது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

அதேநேரம், அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் வரும் 11ம் தேதி நள்ளிரவு வரை நோட்டுக்கள் பெறப்படும்.

இந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை அனைத்து வங்கிகள் மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் வரும் டிசம்பர் 30ம் தேதிக்கு முன்பாக கொடுத்து, புதிய வகை ரூபாய் நோட்டுக்களாக அவற்றை மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே மக்கள் தங்களிடமுள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை டிசம்பர் 30ம் தேதிக்குள் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.



அதற்கு பதிலாக புதிதாக அச்சடிக்கப்பட்ட ரூ.500 மற்றும், ரூ.2000 முக மதிப்பிலான நோட்டுக்களை அரசு சப்ளை செய்ய உள்ளது. இது பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

ஆனால் பணமுதலைகளையும், அரசியல் வாதிகளையும் கைவைத்தால் போதுமே என்ற எதிர்குரலும்,
மேலும் இது திருடனை மாற்று திசையில் செல்லவே வழிவகுக்கும் ஒழிய பாதிக்கப்படுவது என்னவோ சாமான்ய மக்களே.....என சொல்வோரும் உண்டு.

சாமான்ய மக்கள் பாதிக்கப்படுவது உறுதி அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.அதற்காக திருடன் என்று திருந்துவான் என காத்திருக்கவும் முடியாதே..

எது எப்படியோ கருப்பு பணம் ஒழிந்தால் நம் அனைவருக்கும் சந்தோசமே....


No comments:

Post a Comment