ஆசிரியர் பணி தொடர்பாக,
நம்மை வியப்பில் ஆழ்த்துகிற தகவல் குறிப்பிடங்கிய விளக்கப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த படச்செய்தி உண்மையில், அரசுப்பள்ளி ஆசிரியர்கள்
வேலை பார்க்காமல் ஊதியம் பெறுகிறார்களா.....? என்கிற
பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
அப்படி...என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துகொள்ள,கீழே உள்ள தகவல் அடங்கிய படத்தை கொஞ்சம் உற்று பாருங்கள்.
ஒருவேளை பார்வையாளர்களில் யாரேனும் ஆசிரியராக இருப்பின்,
இந்த படச்செய்தியின் உண்மைத் தன்மையினை மக்களுக்கு
தெளிவுபடுத்துங்கள்.
எது எப்படியோ.....
இத்தனை சலுகைகள் இருந்தாலும்,
தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பல ஆசிரியர்களின் (ஒரு சில ஆசிரியர்கள் தவிர்த்து) பங்கு
மக்களின் அறிவு வளர்வதில்
அதிகமாக இருக்கிறது என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
இதில் உங்களுக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என நான் நம்புகிறேன்.
எனக்கு இந்த படச்செய்தியின் உண்மைத்தன்மை தெரியவில்லை.
ஒருவேளை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.நானும் தெரிந்து கொள்கிறேன்,இது உண்மையா....
இல்லை பொய்யாவென்று.
No comments:
Post a Comment