Sunday 1 January 2017

உங்களை மெல்லக்கொல்லும் கோலா குளிர்பானம்...


நீங்கள் கோலா குளிர்பானம் தொடர்ச்சியாக குடிப்பவர் எனில்,
இந்த அதிரவைக்கும் செய்தி உங்களுக்கு தான்...

இன்றைய காலங்களில் குளிர்பான கடைகள் மட்டுமல்லாது,எங்கும் நிறைந்து இருப்பவை தான் இந்த செயற்கை கோலா குளிர்பானங்கள்.

இந்த கோலா வகை குளிர்பானங்கள் உங்கள் உயிரை மெல்ல மெல்லக்கொல்லும் விஷம் என்றால் நம்பமுடிகிறதா.....?

ஆமாங்க.

இந்த கோலா தயாரிக்க இதில் சேர்க்கப்படும் ரசாயனங்களே இதற்கு சாட்சி.

அப்படி என்ன தான் ரசாயனங்கள்
சேர்க்கிறாங்க...என்பது பற்றி முதலில் காண்போம்...

சுக்ரலோஸ்
சோடியம் சைலமேட்
அஸ்ஸுலபாமே பொட்டாசியம் அஸ்பார்ட்டமே
சாக்கரின்
சுக்ரலோஸ்
மால்டோடெக்ஸ்ட்ரின்
4-மெதிலிமிடசோல்
காபின்
நியோடாமே
சுக்ரோஸ்
அலிடாமே
ஹை ப்ரக்ட்டோஸ் கார்ன் சிரப் (HFCS)
பிஸ்பீனால்-A

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பெரும்பாலான ரசாயனங்கள் நிறமூட்டியாக சுவையூட்டிகளாக மற்றும் இனிப்பூட்டிகளாக இந்த கோலா வகை குளிர்பான தயாரிப்பின் போது சேர்க்கப்படுகிறது.

தொடர்ச்சியாக இந்த கெமிக்கல் அடங்கிய குளிர்பானத்தை பருகும் பொழுது உங்கள் உடல் சந்திக்கும் பிரச்சனைகளை சொல்கிறேன்.....

சர்க்கரை நோய்
இதய நோய்
கேன்சர்
உடல் பருமன்
ஞாபக மறதி
குடல் சம்பந்தப்பட்ட நோய்
ஜீரணக்கோளாறு
அதிக ரத்த அழுத்தம்
உடல் எடை கூடுதல்
வயிற்றுக்கோளாறு
சோர்வு
படபடப்பு
அதீத செயல்பாடு
நடத்தையில் மாற்றம்
மூளையில் புற்றுக்கட்டி
உணர்ச்சியில் சமநிலையின்மை உணவினால் அலர்ஜி
மலட்டுத்தன்மை
விறைவிதை பிரச்சனை
உடல் உறுப்புகள் செயல் இழத்தல் செக்ஸ் குறைபாடு
தூக்கமின்மை

மேலே சொன்னவை எனக்கு தெரிந்தவை,எனக்கு தெரியாத புதிய புதிய கெமிக்கல் அவ்வப்போது ஏற்படும் மக்கள் எதிர்ப்பு காரணமாக நீக்குவதும்,சேர்ப்பதுமாக இந்த
கோலா கம்பெனிகள் ஒன்றுபோல
இன்றுவரை கடைபிடிக்கின்றன.


ஏன்...?.....ஒரு சில நாடுகளில் கூட இது போன்ற கோலா குளிர்பானங்களுக்கு தடை  விதிக்கப்பட்டுள்ளது.நம் நாட்டில் தான் சட்டங்கள் காற்றில் பறக்கிறது.
ஆகவே தான்,இன்னும் நம் நாட்டை மட்டுமல்ல; நம் உயிரையும் சூறையாடுகிறார்கள், முதலீடு என்ற ஒற்றை வார்த்தையால்..

குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலப்பதாகவும் மற்றும் குளிர்பானம் அடைத்து விற்க பயன்படுத்தப்படும் சிறிய கேன்கள் கேன்சர் உருவாக்குபவை என்கிற சர்ச்சை வெளிப்படையாக இன்றும் உலகம்பூரா ஒலித்துக்கொண்டே கொண்டே இருக்கிறது.

மற்ற நாடுகள் செவி சாய்த்தாலும்,நம் நாடு ஏனோ... ஒன்றும் தெரியாதது போல அவ்வப்போது விழிப்பதும், உறங்குவதும் போல பாசாங்கு செய்கிறது.

என்ன செய்ய..? நமக்கு வாய்த்த
அரசியல் வியாதிகள் அப்படி...

இன்னொன்று தெரியுமா...?
வெறும் ஒரு ரூபாய் மதிப்புள்ள இந்த குளிர்பானங்களை,நீங்கள் பத்து ரூபாய்க்கு வாங்கி குடிக்கிறீர்கள் (
இந்த பத்து ரூபாயில்,குறிப்பிட்ட சதவீதம் நம்மை அவர்களது குளிர்பானத்தின்பால் கவர்ந்திழுக்க
தயாரிக்கப்படும் விளம்பரத்தின் வாயிலாக,அதில் நடிக்கும் நடிகர்கள்
மற்றும் கிரிக்கெட் வீர நடிகர்களுக்கு வருவாயாக போகிறது).

சரி....உங்களிடம் கொள்ளை லாபம் பார்க்கும் இந்த கோலா கம்பெனிகளால் உங்கள் உடம்பிற்கு   என்ன லாபம்......? நீங்களே சொல்லுங்கள்.

ஒன்றை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள்..
நீங்கள் அன்றாடம் காசு கொடுத்து,
தினம் தினம் குடிப்பது குளிர்பானம் அல்ல; மெல்ல மெல்ல உங்கள் உயிரைக் கொல்லும் விஷம்.


இனியாவது விழித்துக்கொள்ளுங்கள்.
இனிமேல் இது போன்ற கோலா
குளிர் பானங்களை குடிப்பதா...அல்லது வேண்டாமா...?..என்று முடிவெடுக்க   வேண்டியது உங்கள் கையில் தான்.

No comments:

Post a Comment