Saturday 28 January 2017

எமனை அருகில் வைத்துக்கொண்டு தூங்கலாமா...?




நிம்மதியாகவும்,நீண்டகாலம் உயிரோடு வாழ வேண்டும் என்றால்....இதனை அருகில் வைப்பதை தவிர்ப்பதோடு மட்டுமல்லாது,சீக்கிரமே புறந்தள்ளிவிடுங்கள்.

இல்லையேல்...நீங்கள் எமனை அருகிலே வைத்துக்கொண்டு தூங்குவது போல் ஆகிவிடும்.

நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்பது பற்றி ஓரளவுக்கு உங்களுக்கு புரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்.

ஆமாங்க நண்பர்களே....
இரவானால் பேய்க்கு பயப்படுகிறோமோ,இல்லையோ....  கொசுவுக்கு பயப்படுகிறோம்.

காரணம் ஒன்று தான்...
கொசுவானது நம்மை நிம்மதியாக தூங்க செய்யாமல் விடுவதோடு மட்டுமல்லாது,நோய்க்காரணியையும் நம் உடலுக்குள் செலுத்தி,நம் உயிருக்கும் உலை வைத்துவிடும்.

ஆகவே தான்,நாம் அனைவரும் கொசுவிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள பலவிதமான இயற்கை மற்றும் செயற்கை முறையிலான
கொசுவிரட்டியினை பயன்படுத்தி வருகிறோம்.

கொசுவிரட்டிகளின் ஆதியான கொசுவர்த்தி சுருள் பற்றியும்,அது நம் உயிர்க்கு வைக்கும் வேட்டு பற்றியும் இப்பதிவில் விரிவாக காண்போம்...

உலகின் பல பகுதிகளில் பல முறைகள் பின்பற்றி வந்தாலும், ஜப்பானில் தான் வணிகரீதியாக கொசுவிரட்டிகளுக்கு
முதன் முதலாக விதை தூவப்படுகிறது.
அதன் வடிவம் தான் சுருள்.

ஆமாங்க..

கிரைசாந்திமம் (Chrysanthemum)
என்றழைக்கப்படும் துலிப் மலரை காயவைத்து பெறப்படும் பைரெத்ரம்
(pyrethrum) மற்றும் மரத்தூள் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருளை இயற்கை கொசுவிரட்டியாக ஜப்பானிய மக்கள் பயன்படுத்தி வந்தனர்.

ஜப்பானிய தொழில் அதிபர்,
எலிசிரோ உயேமா (Elichiro Ueyama) தனது முயற்சியால்,கொசுவை
விரட்டும் சுருளை முதன் முதலாக
உருவாக்குகிறார்.

இது தான்......இன்று உலகமே பயன்படுத்தும் கொசுவர்த்தி
சுருளுக்கு அச்சாணி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்னர்,உயேமா தனது மனைவியின் ஆலோசனையின் பேரில்,பலவித நறுமணத்துடன் கூடிய கொசு விரட்டும் ஊதுபத்திகளை உலகிற்கு அறிமுகம் செய்கிறார்.

இந்த இயற்கை கொசுவர்த்தி சுருளானது பொதுவாக நீண்ட நேரம் நிலைத்து நிற்காது,சூரிய ஒளி பட்டால் எளிதில் தனது சுயத்தை இழந்து விடும்.

இதன் விளைவாக நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கும்,ப்யர்த்ரோய்டு
(pyrethroid) எனும் செயற்கை ரசாயனத்தை அடிப்படையாக
கொண்ட கொசுவர்த்தி சுருளை தயாரிக்க தொடங்கினார்கள்.

இங்கு தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது...

ஆமாங்க...இது மனித உடலுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தவல்லவை.

இது ஆரம்பம் என்றால்......இதன் தொடர்ச்சியாக இன்று மனித உடலுக்கு ஒவ்வாத பலவிதமான கெமிக்கல்,
பல இயற்கை நறுமணங்களுடன் சேர்க்கப்பட்டு கொசுவர்த்தி சுருள்
உலகம் முழுக்க விற்பனைக்கு வந்து கொண்டு தான் இருக்கிறது.அதனை நாமும் விவரம் தெரியாது காசு கொடுத்து வாங்கி,அதன் புகையை காற்றோடு காற்றாக சுவாசித்து கொண்டிருக்கிறோம்.

சரி கொசுவாவது தொலைந்ததா..?  என்றால்....அதுவுமில்லை.

நம் காதருகே,நான் திரும்பி வந்துட்டேனு.... ரீங்காரமிட்டு...
நம்மை ஏளனம் செய்து கொண்டேயிருக்கிறது கொசு..!!

சரி...
அப்படி என்னதான் மனித உடலுக்கு ஒவ்வாத ரசாயனங்கள்,இந்த கொசுவர்த்தி சுருள் தயாரிக்க  பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்ப்போம்...

dibutyl hydroxyl toluene (BHT),
piperonyl butoxide (PBO),
otachlorodipropyl ether,
N,N-Diethyl-meta-toluamide (DEET),
N-(2-ethylhexyl)-bicyclo-(2,2,1)hept-5-ene-2,3-dicarboximide (MGK 264),
bis (chloromethyl) ether(BCME)
pyrethrum,
pyrethrin,
allethrin

இதுபோக இந்த கொசுவர்த்தி சுருள் எரியும் போது,புகையில் இருந்து
வெளிப்படும் பார்மால்டீஹைடு (formaldehyde) ரசாயனம்
இன்னும் மோசமானது.

அதவாது,ஒரு கொசுவர்த்தி சுருள்
வெளிப்படும் இந்த ரசாயனத்தின் தாக்கமானது மட்டும்,சுமார் 50 சிகரெட் புகைப்பதினால் என்ன விளைவு உருவாகுமோ,அத்தகைய விளைவுகளுக்கு சமமானது, என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள்..
இந்த பார்மால்டீஹைடு கெமிக்கல்,
எத்தகைய கொடிய விஷமென்று...

இந்த கொசுவர்த்தி சுருள்
எரிந்து உருவாகும் புகையினை சுவாசிப்பதனால்,நம் உடலுக்கு
வரும் மோசமான தீங்குகள்....

சுவாசக்கோளாறு,
ஆஸ்துமா,
குமட்டல்,
வாந்தி,
நுரையீரல் புற்றுநோய்,
மலட்டுத்தன்மை,
இருமல்,
தும்மல்,
கண்ணில் நீர் வடிதல்,
மூக்கில் தொற்று,
தொண்டைப்புண்,
கல்லீரல் தொற்று,
லூகேமியா புற்றுநோய்,
தோலில் எரிச்சல்,
சைனஸ் தொந்தரவு,
சுவாசப்பாதையில் புற்று, மூச்சுத்திணறல்

நண்பர்களே...யோசித்துப்பாருங்கள். நாம் அன்றாடம் ஏதோ ஒருவகையில், நம் உடம்பை சிதைத்து கொண்டு இருக்கோம்,என்பதனை இதன் மூலம் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

சரி...இதற்கு என்ன தான் நிரந்தர தீர்வு
என்கிறீர்களா..?

தற்போது இயற்கை கொசுவிரட்டிகள் மிகுதியாக பசுமை அங்காடிகளில் கிடைக்கிறது.அதனை வாங்கி பயன்படுத்தி பாருங்கள்.

கொசு உருவாவதை தடுக்கும் இயற்கை வழிமுறைகள் பலவற்றை கையாள முயற்சி செய்யலாம்.

ஆனால் மறந்தும் இனிமேல் இந்த செயற்கை ரசாயனம் நிறைந்த  கொசுவர்த்தி சுருள் பயன்படுத்துவதை
தயவுசெய்து மறந்திடுங்கள்.

இல்லாவிட்டால்....

உங்களது குழந்தைகளுக்கு மேலே சொன்ன பிரச்சனைகள் உருவாக நீங்களே காரணமாகிவிடுவீர்கள், என்பதனை மறக்காதீர்...

கொசுவர்த்தி சுருள் எனும் எமனை அருகிலே வைத்து கொண்டு
தூங்காதீர்கள்...

இது உங்களுக்கு மட்டுமல்ல..
உங்களை சுற்றியுள்ளவர்க்கும் கேடு.

இயற்கையோடு இணைந்து வாழப்பழகுவோம்.

No comments:

Post a Comment