Tuesday 10 January 2017

பெண் பிறப்பை மட்டுமே தீர்மானிக்கும் அதிசய மருந்து....


என்னடா.........இது என்ன புதுசா இருக்கு.

அது எப்படி சாத்தியம்......அதுவும் ஆண் இல்லாத பெண் சமுதாயமா.... வாய்ப்பே இல்லை என்கிறீர்களா....?

ஆனால்,அதனை நம் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா
சார்ந்த மருந்தியல் விஞ்ஞானி
DR.B.S ஆலேக் (aulakh),இந்த பெண் பாலினத்தை தீர்மானிக்கும் கெமிக்கல் பார்முலா அடிப்படையிலான புதிய  அதிசய மருந்தினை கண்டுபிடித்து சாத்தியப்படுத்தியிருக்கிறார்

என்ன அவர் கண்டுபிடித்தது மனிதனில் இல்லை.மாறாக கால்நடையில்....

இந்த மருந்தை கால்நடைகளுக்கு கொடுத்தால் பெண் கன்றுகள் மட்டுமே ஈன்றும்..ஆண் காளைகள் ஈன்றாது.
(நாளைக்கே.....இது மனிதனில் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
அப்புறம் என்ன.... உலகம் முழுக்க
சக்தி மயமாகத்தான் இருக்கும்).

சரி...இந்த மருந்து என்ன செய்யுது....?

இந்த female sex fixer மருந்து கருக்கலைப்பு வேலையினை செய்வதில்லை.மாறாக பெண் பாலினத்தை தீர்மானிக்கும் xx செக்ஸ் குரோமோசோமை மட்டும் கரு உருவாக்கத்தில் பங்கு பெற செய்கிறது (மாறாக xy குரோமோசோமை கரு உருவாக்கத்தில் பங்கு பெறாமல் செய்துவிடுகிறது).

இந்த மருந்தினால் பக்க விளைவுகள் ஏற்படுவது இல்லை எனவும் சொல்கிறார்கள்.அது எந்தளவுக்கு சாத்தியம் இல்லை எனத் தெரியவில்லை.ஆனாலும் இதனை அங்கீகரிக்கும் விதமாக பல ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா போன்ற உலக நாடுகள் பலவும் ஏற்றுக்கொண்டுள்ளன.

இந்த மருந்தை இந்தியர் கண்டுபிடித்தாலும்,இந்தியாவில்
இந்த மருந்து உண்மையிலேயே அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்கிற விவரம் இல்லை.மேலும் இந்த மருந்து நம் நாட்டில் எந்த அளவில் பயன்பாட்டில் உள்ளது என்கிற தகவலும் இல்லை.

AulproFem,Heifermate,Pro-heifer என்று மூன்று விதமான பெயர்களில் உலகமெங்கும் நடைமுறையில் உள்ளதாக தகவல்.

இந்த மருந்து பயன்படுத்துவது
எளிதும் கூட.ஆமாங்க.... கால்நடைகளின் வாய் வழியாக இந்த மருந்து செலுத்தப்படுகிறது.

நீங்களே யோசித்து பாருங்கள்....இந்த மருந்தால்,மனித சமூகத்திற்கு  என்ன பயன்....?

பெண் பசுக்கள் மட்டும் அதிகம் பிறந்தால்.....

இயற்கையாகவே பால் உற்பத்தி மிகுதியாகும்.

இதன் மூலம் உலகில் உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் சிறுவயதிலே இறப்பது தவிர்க்கப்படும்.

உலகில் உள்ள பல நாடுகள் வறுமையில் இருந்து மீள்வதோடு,தனது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ள இயலும் .

மேற்கூறிய ஊட்டச்சத்து குறைவால்
குழந்தைகள் இறப்பு,வறுமை போன்ற
விஷயங்கள் தான் இந்த மருந்தினை கண்டுபிடிக்க தனக்கு தூண்டுகோளாய் அமைந்ததாக இதனை கண்டுபிடித்த மருந்தியல் விஞ்ஞானி,DR.B.S ஆலேக் (aulakh), தெரிவித்துள்ளார்.

இந்த மருந்து மனித இனத்திற்கு அச்சுறுத்தல் என்று சொல்வோரும் உண்டு.

எது எப்படியோ........ மக்களுக்கு இது போன்ற கண்டுபிடிப்புகள் பயன்பட்டால் சந்தோசமே.

No comments:

Post a Comment