Monday 14 November 2016

இயற்கை மருந்து - வெற்றிலை


வெற்றிலை என்றதும் அந்த கால பெரியவர்களான நம் தாத்தா மற்றும் பாட்டி நம் கண்முன் வந்து செல்வார்கள்.

இன்றோ அரிதிலும் அரிதாக திருமண வைபோகங்களில் தாம்பூலமாக பயன்படுத்துகிறார்கள்.காலம் காலமாக நம்மோடு கலந்திருக்கும் வெத்தலையை பற்றிய சுவாரசியமான மருத்துவ தகவல்களை இப்பதிவில் விரிவாக காண்போம்.

வெற்றிலை என்பது மிளகு குடும்பத்தை சேர்ந்த ஒரு கொடிவகை தாவரம்.

வெற்றிலைப் பயிருக்கு விதை என்று எதுவும் இல்லை. காம்புகளை வெட்டி பதியன் போட்டுத்தான் பயிர் செய்கிறார்கள்.

கரும் பச்சை என்பது ஆண் வெற்றிலை
என்றும்,இளம் பச்சை என்பது பெண் வெற்றிலை என்றும் சொல்வழக்கு உண்டு.

மலேசியாவில் தோன்றிய இச்செடி,
தற்போது இந்தியா மற்றும் இந்தோனேசியா போன்ற மற்ற
நாடுகளில் வளர்க்கப்படுவதோடு மட்டுமல்லாது பணத்தை ஈட்டி தரும் தாவரமாகவும் திகழ்கிறது.

தமிழகத்தில் கும்பகோணம்,
பெரியபட்டிணம்,சின்னமனூர்,கூடலூர்,பரமத்தி வேலூர்,பொத்தனுர்,புகழுர்,
தொட்டியம் மற்றும் சோழவந்தான் முதலான ஊர்கள் வெற்றிலைக்கு பேர் போனவை.இங்கு விளையும் வெற்றிலைக்கு மவுசு என்றும் அதிகம்.

அப்படி என்னதான் இந்த வெற்றிலையில் இருக்கு......?

நீர்ச்சத்து -84.4%
புரதச் சத்து-3.1%
கொழுப்புச் சத்து-0.8%
கலோரி அளவு-44
இரும்புச்சத்து
கால்சியம்
கரோட்டின்
தயமின்
நியாசின்
ரிபோபிளேவின்
வைட்டமின்-C

சமீபத்திய ஆராய்ச்சியில்,சவிக்கால்
என்னும் வீரியமிக்க நோய் எதிர்ப்பு பொருள் வெற்றிலையில் மிக அதிகமாக இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.இந்த சவிக்கால்(chavicol) கிருமிகளை கொள்ளும் ஆற்றல் மிக்கது.

அப்படி என்ன பெருசா.............நம் உடம்பிற்கு என்ன செய்து இந்த வெத்தலை...

புற்றுநோய்
தோல் நோய்கள்
ஜீரணக்கோளாறு
அல்சர்
தேள்கடிக்கு
தாய்ப்பால் சுரக்க
தலைவலி
கபம்
சளி
நோய்தொற்று
சொறி சிரங்கு
ஆஸ்த்மா
மூட்டுவலி
ரத்த அழுத்தம்
ஒழுங்கற்ற மாதவிலக்கு தொண்டைப்புண்

போன்ற பல பிரச்சனைகளில் இருந்து நம் உடம்பை காக்கிறது.மேலும் சிவப்பு வெற்றிலை ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.


வெற்றிலையுடன் சிறிது மிளகுப்பொடி சேர்த்து சுவைத்தால் சளி,அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போக்குவதோடு
மட்டுமல்லாது உங்கள் உடல் எடையை கூட கட்டுப்பாட்டில்
வைத்துக்கொள்ளும்.

என்ன... அன்று நம் முன்னோர்கள்,இந்த வெத்தலை,பாக்கு,சுண்ணாம்பு மற்றும் புகையிலை என கலந்து கட்டி சுவைத்து வந்தார்கள்.

இன்றும் பல்வேறு வடிவங்களில் பீடா கிடைக்கின்றன.இவை அனைத்துமே புற்றுநோய் உண்டாக்குபவை;காரணம் பாக்கு,புகையிலை மற்றும் அதில் கூடுதலாக சேர்க்கக்கூடிய போதை வஸ்துக்கள்.

நீங்கள் கவனத்தில் முக்கியமாக கொள்ளவேண்டியது என்னவென்றால், வெற்றிலையை மேல் சொன்ன எதுவும் சேர்க்காது தனியாக பயன்படுத்தினால் மட்டுமே அதனால் நமக்கு மருத்தவ பலன்கள் அதிகம்.

வெற்றிலையும் மருந்தே..........அதனை நீங்கள் பயன்படுத்துவதை பொறுத்து.

No comments:

Post a Comment