Wednesday 30 November 2016

எய்ட்ஸ் எனும் அரக்கன்........?


மக்களிடையே HIV பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும்,எய்ட்ஸ்(AIDS)யினால் இறந்தவர்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கும் விதமாகவும் 1988 ஆம் ஆண்டில் இருந்து டிசம்பர் முதல் நாள் உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

2013 ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுக்க 36 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் என்கிற பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறை நோயால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் நாம் நினைப்பது போல் எய்ட்ஸ் ஒன்றும் எளிதில் பரவும் தொற்று நோய் இல்லை.

மாறாக பாதிக்கப்பட்டவரின் ரத்தத்தின் மூலம் மற்றும் தவறான பாலியல் தொடர்பு வாயிலாக அதிகளவில் பரவுகிறது.

இது நம்மிடம் உள்ள நோய் எதிர்க்கும் சக்தியினை முழுமையாக அழித்து ஒழிக்கிறது.இதன் மூலம் மற்ற சாதாரண நோய் உருவாக்கும் கிருமி கூட, நம் உடம்பிற்குள் எளிதில் நுழைந்து நோயினை உருவாக்குகிறது.

இவ்வாறு பல நோய்க்கிருமிகள் உருவாக்கும் நோய்கள் பல ஒருசேர, ஒருவர் உடம்பில் உருவாக வழி வகை செய்துவிடுகிறது.

நமக்கு சாதாரணமாக டைபாய்டு வந்தாலே நம்மலால தாங்க முடியல.. அதுவே டைபாய்டு உடன் மஞ்சள் காமாலை, காசநோய்,கொனேரியா என பல நோய்கள் ஒரு சேர ஒருவனுக்கு
வந்தால் நீங்களே யோசித்து கொள்ளுங்கள் என்ன நிகழும் என்று...

எப்படி என்றால்........?

உதாரணமாக நம் நாட்டை பாதுகாக்கும் ராணுவ வீரர்களை கொன்று விட்டு, எதிரிகள் நம் நாட்டுக்குள் நுழைந்தால் என்ன நமக்கு நிகழுமோ, அது போன்ற நிகழ்வே எய்ட்ஸ்-யினால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடம்பிற்குள்ளும் நிகழும்.

அதாவது நம் உடம்பின் போர் வீரர்களாகிய ரத்த வெள்ளை அணுக்களை கொன்று,நம் உடம்பின்
நோய் எதிர்ப்பை குறைத்து,மற்ற நோய்க்கிருமிகள் அதாவது எதிரிகளை உடம்பினுள் உள்ளே செல்ல
அனுமதிக்கிறது எய்ட்ஸ் வைரஸ்கள்.

ஒழுக்க குறை உடையோருக்கு மட்டுமே வரும் என்று ஒரு சிலர் சொல்வார்கள்.
அது உண்மை தான்..மறுப்பதற்கில்லை. ஆனால் பிறந்த குழந்தைகள் கூட எய்ட்ஸ்-யினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.அதற்காக அவர்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்று நம்மால் சொல்ல முடியுமா....?

இதில் நாம் புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று தான்...
அது என்னவென்றால் இந்த நோய்
நாம் தெரிந்தோ,தெரியாமலோ ரத்தம் வழியாக பரவுகிறது.

எச்சரிக்கை உணர்வோடு நம்மை நாமே
வருமுன் காத்தல் நன்று.

ஒருவேளை நமக்கு தெரிந்த அல்லது தெரியாத நண்பருக்கு எய்ட்ஸ் வந்து விட்டால் அவர்களை ஒதுக்கி தள்ளாது, அவர்களையும் மற்ற நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களை போல கண்காணிக்க வேண்டும்.

அவர்களை தொடுவதாலோ, அவர்களுடன் பேசுவதாலோ ஒரு போதும் நமக்கு அவர்களிடமிருந்து நோய் பரவப்போவதில்லை என்பதே உண்மை.

அவர்களும்
நம்மை போன்றவர்களே....
ஆதரிப்போம்...அரவணைப்போம்....
என டிசம்பர் முதல் நாளான இன்று நாம்
அனைவரும் உறுதி ஏற்போம்.

No comments:

Post a Comment