ஆமாங்க.....முன்னதாக ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் இவ்வாண்டு டிசம்பர் 31ம் தேதியோடு நிறைவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.தற்போது
ரிலையன்ஸ் ஜியோ இலவச சேவைகள் அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி முறைப்படி பத்திரிக்கையாளர் சந்திப்பில்
தெரிவித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது,
ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே நாங்கள் இலவசமாக அளவற்ற அழைப்பு மற்றும் இணையதள சேவையை வழங்கி வருகிறோம். இந்த திட்டம் முன்னர் அறிவித்தபடி, டிசம்பர் 31ம் தேதி முடிவடைகிறது.
ஜனவரி 1ம் தேதிக்கு பிறகும்
புத்தாண்டு சலுகை என்ற பெயரில் இதே திட்டத்தை தொடருவோம். எனவே அளவற்ற அழைப்புகள் மற்றும் இணைய சேவை மார்ச் 31ம் தேதி வரை இலவசமாகவே இந்த சலுகை தொடரும்.
இதற்காக சிம்மை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.டிசம்பர் 3ம் தேதிக்கு பிறகு சிம் வாங்குவோருக்கும், மார்ச் 31ம் தேதிவரை இலவசம் தொடரும்.
என்ன சந்தோசமா மக்களே....
இன்னொரு நாலு மாசத்திற்கு இணையத்திற்கு செலவு செய்யும்
பணம் கொஞ்சத்தை
மிச்சப்படுத்தலாம்.
No comments:
Post a Comment