Sunday 25 December 2016

வேலியே பயிரை மேயலாமா...?


மக்கள் தாங்கள் சம்பாதித்த பணத்தை நகையாக மாற்றி வீட்டில் வைத்தால் பாதுகாப்பு இல்லை என்று வங்கி லாக்கர்களில் வைத்தால்,அந்த வங்கி ஊழியர்களே அதற்கு வேட்டு வைத்தால் எப்படி....?

ஆமாங்க....

திருவாரூர் மாவட்ட பாவட்டக்குடியில் உள்ள கனரா வங்கியில் இரண்டு கோடி மதிப்பிலான ஒரிஜினல் தங்கநகைகளை நயவஞ்சமாக திருடிவிட்டு,அதற்கு பதிலாக அச்சு அசலான போலி தங்க முலாம் பூசிய நகைகளை வைத்திருக்கின்றார் அங்கு வேலை பார்க்கும் ஊழியரே...!

இந்த விவரம் தெரிய வந்ததும், உடனடியாக அந்த வங்கி மேலாளர் காவல் துறைக்கு தகவல் சொல்ல,
காணாமல் போன சம்பந்தப்பட்ட
நகைகளை மாற்றி வைத்த வங்கி நகை மதிப்பீட்டு ஊழியர் ஜெகதீசை போலீஸ்
தேடி வருவதாக தகவல்.

நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்....
திருடனுக்கு பயந்து போலீஸ் வீட்டில் ஒரு பொருளை வைத்தால்,அந்த பொருளை போலீசே திருடினால் எப்படி....?

அப்படி தான் இங்கும்....
வேலியே பயிரை மேய்கிறது.

அன்றாடம் இது போன்ற செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கிறது, என்றாலும் இதற்கு யார் தான்
முற்றுப்புள்ளி வாய்ப்பது....?

என்ன செய்ய....?
மனிதனுக்கு ஆசை வந்தால் பரவாயில்லை:ஆனால்
பேராசை வந்தால்.....

No comments:

Post a Comment