Tuesday 25 October 2016

உங்களை வாழவைக்கும் அதிசய வாழைப்பழம்....


முக்கனிகளில் மூன்றாவது கனியான வாழைப்பழத்தின் வரலாற்றை முதலில் கொஞ்சம் திரும்பி பார்ப்போம்....

வாழைப்பழம் அக்காலத்தில்
இப்போது போன்று அளவில் பெரிதாக
இருந்ததில்லை. விரல் நீளம் தான் இருக்குமாம்,அதனால் தான்
அரேபியர்கள் வாழைப்பழத்துக்கு பனானா என்று பெயரிட்டு அழைத்தனர்.பனானா என்றால் அரேபிய மொழியில் விரல் என்று அர்த்தமாம்.நாளடைவில் ஆங்கிலத்திலும் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டு, உலகம் முழுதும் இன்று  "banana" என்று வாழைப்பழம் அழைக்கப்படுகிறது.

மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தபொழுது இந்த வாழைப்பழ மகிமையினை உணர்ந்து உண்டதாகவும்,அவர்மூலமாகவே இந்த பழம் பற்றிய விவரம் உலகம் முழுக்க பரவியதாகவும் ஒரு வரலாற்று சேதி உண்டு.
இன்று உலகு முழுக்க வாழைப்பழம் பரவி கிடக்க காரணமான அலெக்சாண்டருக்கு நன்றி சொல்வோம் நண்பர்களே...



சரி விசயத்திற்கு வர்றேன்...........

ஒரு விஷயம் தெரியுமா...?
உலகிலேயே அனைத்து இடங்களிலும் கிடைக்கக்கூடிய பழம் வாழைப்பழம்.

என்ன...?.வகை மற்றும் பெயர் தான் வேற வேற இருக்கும், குணம் ஒன்று தான்.அதனை மறக்கவேண்டாம்.


வாழைப்பழம் என்றால் யாருக்குத்தான் புடிக்காது.
ஆனால் விலைதான் அதிகம்
என யோசிக்கிறீர்களா....?

சற்று சிந்தியுங்கள்...🤔

நோய் வந்த பின் மருந்துக்காக லட்சக்கணக்கில் செலவழிப்பதை விட நோய் வருமுன் உங்கள் பொன்னான உடம்பை காக்க அன்றாடம் குறைந்தது ஐந்து ரூபாய் செலவழிக்கலாமே...

எங்கள் பகுதியில் ஒரு சிலேடை உண்டு அது என்னனா...

"வைத்தியனுக்கு கொடுக்குறத வாணிகனுக்கு கொடு"

இது சரியா தவறா என ஒவ்வொருவரும் ஆராய்ச்சியில் இறங்கத்தேவையில்லை.
ஆனால் சிந்திக்க வேண்டிய விஷயம்.

எழுபதுக்கும் மேல் வாழைப்பழ வகைகள் இருக்கின்றன.அவற்றுள் ரஸ்தாலி,செவ்வாழை,மொந்தன்,பச்சைவாழை, மலைவாழை, பேயன் வாழை,நவரை வாழை போன்ற அனைத்தும் நம் பகுதியில் எளிதில் கிடைக்கவல்லவை.



இவற்றில் தினசரி ஏதேனும் ஒரு வகை வாழைப்பழத்தை சாப்பிட்டு வாங்க..அதுபோதும்,ஒருபோதும் நோய் அணுகாது உங்கள் உடம்பை அது பாதுகாக்கும்.இந்த பழங்களை அனைத்து வித வயதினரும் சாப்பிடலாம்.

முதலில் மேலே குறிப்பிட்டுள்ள வாழைப்பழ வகைகளின் சிறப்பு பற்றி பார்ப்போம்...



உடல் சூட்டை தணிக்க பச்சைவாழை,
நா சுவைக்கு ரஸ்தாலி,
உடல் பலத்திற்கு செவ்வாழை,
காமாலைக்கு மொந்தன்,
ரத்தசோகைக்கு மலைவாழை,
குடல்புண்ணிற்கு பேயன் வாழை,
கரப்பான் நோயிற்கு நவரை வாழை.



சரி அப்புடி என்னதான் உடம்பிற்கு செய்துன்னு பார்ப்போம்.இவயாவும் வாழைப்பழங்களால் ஏற்படும் பொதுவான பலன்கள்...

மலச்சிக்கல் இருந்தால் போக்கிவிடும்.
சரும நோய்களுக்கு நிவாரணி.
ஒழுங்கற்ற மாதவிலக்கு சரிசெய்திடும்.
ஜீரணத் தொடர்பான நோய்களுக்கு சிறந்த இயற்கை மருந்து.
சாப்பிட்ட பின் சுறு சுறுப்பு உண்டாக்கும் ஆற்றல்.
பக்கவாதம் வராமல் தடுக்க உதவுகிறது.
மூலம் மற்றும் பவுத்திரம் நோய்களுக்கு நிவாரணி.
நெஞ்செரிச்சலை சுலபமாக போக்கி விடுகிறது.
அல்சர் நோயிற்கு அருமருந்து.



இவ்வளவு நோயிற்கு இயற்கை உணவே மருந்தாக செயல்படும் வாழைப்பழத்தில் அப்படி என்னதான் அதியசம் புதைந்து கிடைக்குனு பார்ப்போமா....

டிரிப்டோபன்
செரடோனின்
வைட்டமின் A
வைட்டமின் C
வைட்டமின் E
வைட்டமின் K
வைட்டமின் பி1
வைட்டமின் பி2
வைட்டமின் பி3
வைட்டமின் பி5
வைட்டமின் பி6 அதிகளவு
வைட்டமின் பி9
கால்சியம்
மெக்னீசியம்
ஜின்க்
பாஸ்பரஸ்
மாங்கனீசு
செலினியம்
பொட்டாஷியம் அதிகளவு
ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்
இரும்பு
காப்பர்
பயோட்டின்
நார்ச்சத்து அதிகளவு
கார்போஹைடிரேட்ஸ்
புரதம்
கொழுப்பு  குறைந்தளவு
ஆன்டாசிட்

எப்புடி...எப்ப சாப்பிடுறது?

வாழைப் பழத்தை அப்புடியே....ஆமாங்க தோலை உரித்து சாப்பிடலாம்..
பாலில் போட்டு சாப்பிடலாம்...
வேகவைத்து சாப்பிடலாம்...
மசித்து சாப்பிடலாம்...

காலை,மாலை,இரவு என எப்பொழுதும் சாப்பிடலாம்.
நோய் வந்த பின் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.



நோய் வருமுன் நம் உடம்பை காப்போம், என இன்றில் இருந்து ஏதேனும்
ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவோம்.

நம் வாழ்நாளை கொஞ்சமேனும்
இந்த
அவசரகதி உலகத்தில்
அதிகப்படுத்தி கொள்வோம்.

3 comments:

  1. வாழைப்பழம் பற்றிய அரிய தகவல்களை அறிய தந்த விதம் அருமை.

    கோ

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete
  3. தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே..

    ReplyDelete