Tuesday 18 October 2016

ஒன்பிளஸ் -இன் ஒரு ரூபாய் மொபைல் வாங்கணுமா....


சியோமி நிறுவனம் போன்றே ஒன்பிளஸ் நிறுவனமும் இந்த வருடம் வாடிக்கையாளர்களை கவர ஒரு ரூபாய் போன் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி ஒன்பிளஸ் நிறுவனம் தங்களது  தீபாவளி பண்டிகை சலுகையாக ரூ.1க்கு மொபைல்போன்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்த விற்பனையானது அக்டோபர் 24-அக்டோபர் 26 ஆம் தேதி வரை ஒன்பிளஸ் தீபாவளி டேஷ் சேல் என்ற பெயரில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் நடைபெறும்.

இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் பகல் 12 மணி,மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணி என மூன்று முறை
இந்த பிளாஷ் விற்பனை நடைபெறும்
என தெரிவித்துள்ளது அந்த மொபைல் போன் நிறுவனம்.

விற்பனையின் போது நீங்கள் மிஸ்ட்ரி பாக்ஸ்களை தேர்வு செய்ய வேண்டும்.அதில் ஏதேனும் ஒரு ஒன்பிளஸ் போன் கூட இருக்கலாம்   அல்லது இல்லாமல் இருக்கலாம்.அது உங்கள் அதிர்ஷ்டத்தை பொறுத்தது.

ஒருவர் தனது அக்கவுண்ட் மூலம்
ஒரு மிஸ்ட்ரி பாக்ஸ் மட்டுமே தேர்வு செய்ய முடியும்.மிஸ்ட்ரி பாக்ஸ் கார்ட்டில் சேர்க்கப்பட்டதும் உடனே ரூ.1 செலுத்தி அதனுள் இருக்கும் பொருளை  பற்றி தெரிந்து கொள்ள முடியும்.கட்டணம் செலுத்தாத பாக்ஸ்கள் மூன்று மணி நேரத்தில் வாபஸ் பெறப்படும்.

ஆசையா இருக்கா....ஒரு நிமிசம்..
அதற்கு நீங்கள் செய்யவேண்டியது இதுதான்...

ஒன்பிளஸ் இந்தியா ஸ்டோரில் முதலில்
உங்கள் பெயர்,மொபைல் போன் நம்பர், மற்றும் முகவரி உள்ளிட்டவற்றை   உள்ளீடு செய்து பதிவு செய்யுங்கள்.

உங்கள் ஈமெயில் மற்றும் மொபைல் எண் மூலம் உங்கள் கணக்கை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக #DiwaliDashSale என்ற பதிவினை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்   அவ்வளவு தான்..

தங்கள் வெற்றி வாய்ப்புகளை அதிகரித்து கொள்ள இந்த விற்பனை
குறித்து தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் அதிக அளவில்
பகிர்ந்து கொள்ள வேண்டும்.

என்ன மக்களே சந்தோசமா...


No comments:

Post a Comment