புதிய ரேசன் கார்டு வாங்க இனி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையை வரும் தீபாவளி முதல் அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கு நீங்கள் www.tnpds.com என்ற இணைய தளத்திற்கு சென்று புதிய ரேஷன்கார்டு விண்ணப்பிக்கும் பகுதியில் தங்கள் விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும்.
குடும்பத் தலைவரின் புகைப்படம், குடும்ப உறுப்பினரின் பெயர்கள் மற்றும் அதற்கான ஆவணங்கள் என அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
ரேஷன் கார்டு வகையை தேர்வு செய்த பின்,காஸ் சிலிண்டர் விபரம் குறித்து பதில் அளிக்க வேண்டும் .
இவை அனைத்தையும் பூர்த்தி செய்த பின் விண்ணப்பதாரரின் மொபைல் போனுக்கு பதிவு செய்ததற்கான தனி அடையாள எண் வழங்கப்படும்.
பின்னர் அந்த மொபைல் எண்ணின் மூலம் ரேஷன் கார்டு நிலவரத்தை அறியலாம்.
இந்த திட்டம் தீபாவளி முதல் அமலுக்கு வரவுள்ளது.என்ன மக்களே சந்தோசமான சேதி வந்தாச்சு.....
இனி தாலுகா அலுவலகங்களில் புதிய ரேசன் கார்டுக்கு விண்ணப்பிக்க நிற்க தேவையில்லை.
அனைவருக்கும் மகிழ்ச்சி தானே...
காண- http://sh.st/30ZYG
No comments:
Post a Comment