Thursday 17 November 2016

இயற்கை மருந்து-பீநாறி சங்கு


என்னடா பெயரே....முகம் சுளிக்கிற மாறி இருக்குனு நினைக்குறீங்களா...

ஆமாங்க...இது மூக்கு பிடிக்கும் வாடை கொண்டாலும்,இதன் பூ,இலை,வேர் போன்றவற்றின் பயனோ பெரிது;
இது நம் எத்தனை பேருக்கு உண்மையிலேயே தெரியும்....?

நம் மூதாதையர்கள் செடிகளை எளிதில் அடையாளப்படுத்திக்கொள்வதற்காக வாசத்தை வைத்து இவ்வாறு அழைத்தனர்.

நாம் இதன் வாசத்தை வைத்து விலகி செல்வதால் தான்,இதன் பயன் நமக்கு தெரியாமல் போயிற்று.இதனால் மனிதனுக்கு பல பயன்கள் உண்டு.
அதனை படிப்படியாக காண்போம்...

இந்த பூக்கும் செடி பீநாறி சங்கு
(Clerodendrum inerme) இந்தியாவை பிறப்பிடமாக கொண்டது.இன்று உலகின் பல இடங்களில் அதுவும் குறிப்பாக கடற்கரை ஓரங்களில்,
வறட்சி மிகு இடங்களில் காணப்படுகிறது.


இதன் வாசத்தை கண்டு நெருங்கி செல்வோரை விட ஒதுங்கி செல்வோரே அதிகம் இது.

இந்தியாவில் மான்க்ரோவ் காடுகள் மற்றும் நம் தெருவில் சாலையோரங்களில் வளர்ந்து கிடக்கும். அதற்கு காரணம் உப்புத்தன்மை மற்றும் அதிக வெப்பம்( இதற்கு சொல்லவா வேண்டும் நம் நாட்டில்...)

சரி விசயத்திற்கு வருகிறேன்....

அப்படி என்னதான் இருக்கு இந்த செடியில்....

டேனின்
டெர்பெனோய்ட்ஸ்
பிலவனாய்ட்ஸ்
அல்கலாய்ட்ஸ்
ஹைடிரோகார்பன்ஸ்
நியோலிக்னின்
புரோடீன்
ஸ்டெராய்ட்ஸ்
அர்சோலிக் அமிலம்
வெர்பாஸ்கோசைடு
குயினோன்

மனுசனுக்கு எந்த விதத்தில் உதவுதுனு பார்ப்போம்....

தலைவலி
இருமல்
கீல்வாதம்
மூட்டுவலி
பக்கவாதம்
மன அழுத்தம்
ஆஸ்துமா
அஜீரணக்கோளாறு
வயிற்றுப்போக்கு
சொறிசிரங்கு
தோல் நோய்கள்
பூச்சிக்கடி
யானைக்கால் வியாதி
தசையில் வலி
கால்விறைப்பு (குறிப்பாக டெட்டனஸ் பாதிப்புக்கு உள்ளானவருக்கு) காய்ச்சல்
மஞ்சள்காமாலை

இதுபோக மலேரியா மற்றும் யானைக்கால் வியாதியை பரப்பும் கொசுக்களை நம்மை நெருங்கவிடாது செய்யும்.

நோய் பரப்பும் பாக்டீரியா,வைரஸ் போன்ற கிருமிகளை அழித்தொழிக்கும் சக்தியினை கொண்டது.

நம் நாட்டில் கிராமப்பகுதிகளில்
எப்படி பயன்படுத்துறாங்கனு
தெரியுமா....?

தண்ணீரில் இதன் இலையை போட்டு வேகவைத்து, அதன் கஷாயத்தை குடிப்பது.......

மிளகு,பெருங்காயம் சேர்த்து மெலிதா அரைத்து அதனை சாப்பிடுவது....

நல்எண்ணெயுடன் இதன் சாற்றை சேர்த்து பின்னர் மிதமாக சூடேற்றி, பின்னர் உடல் வலி போக்க தேய்த்துக்கொள்வது ..

சில நாடுகளில் இதன் சாற்றோடு
தேன் கலந்து மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய மதிப்புமிக்க செடியினை மறந்தது நம் தவறே...
இனியாவது இதனை நினைவில்
வைத்துக்கொண்டு வாசத்தை வைத்து ஒதுக்காது,பயன்படுத்த முயற்சி செய்வோம்.

சரி நண்பர்களே.....
இன்று இயற்கை மருந்து பகுதியில்
பீநாறி சங்கு பற்றி விவரம் கொஞ்சமாவது தெரிந்து
கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகிறேன்.

அடுத்த பகுதியில் நம்மை சுற்றி, நம்மால் மறக்கப்பட்ட செடி ஒன்றின் மருத்துவ பயனை சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்...

1 comment:

  1. இதன் நாற்று எங்கே கிடைக்கும்.

    ReplyDelete