Wednesday 23 November 2016

நம்மை சிரிக்க வைத்தவர்களை இப்படி அழவைக்கலாமா....?


ஒரு காலத்தில் நம் வயிறு நோக சிரிக்க வைத்த நகைச்சுவை நாயகர்கள் இவர்கள்.

தங்கள் கவலைகளை மறைத்து,நம் கவலைகளை மறக்க செய்தவர்கள், அன்று மட்டுமல்ல;இன்றும் தான்...

கதாநாயகர்களுக்காக படம் ஓடிய காலம் போய்,இவர்கள்
இருவருக்காகவே படம் ஓடிய காலங்கள் உண்டு.

குறிப்பாக தொண்ணூறுகளில் இவர்கள் இல்லாத தமிழ் சினிமாக்களை தேடித்தான் கண்டுபிடிக்க வேண்டும்.


இவர்கள் கால்ஷீட் வாங்கியவுடன் தான்
தங்களது படப்பிடிப்பை துவங்கிய தமிழ் பட இயக்குனர்கள் ஏராளம்.

நான் யாரை சொல்கிறேன் என்று உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.

ஆமாங்க ....

நம் மனதை விட்டு நீங்காத
தமிழ் சினிமாவின் புகழ் பெற்ற இரட்டை நகைச்சுவை நாயகர்கள்  கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகிய இருவரை பற்றித்தான் சொல்கிறேன்.


சமீப காலங்களில் இவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தவறாக பரப்பப்பட்டு வரும் வதந்திகள் உண்மையிலேயே வேதனை தருவதாக உள்ளது.

அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிட்ட பிறகும் இன்னும் வதந்திகள் தொடர்வது தான் வேதனையிலும் வேதனை.

பாருங்க...நேற்று கூட இப்படி தவறாக வெளியிடப்பட்ட வதந்திக்காக காவல் நிலையத்தில் திரு கவுண்டமணி சார்பில் புகார் கொடுக்கப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

அவர்கள் இறந்து விட்டார்கள் என்று அவ்வப்போது இடைவெளி விட்டு
வதந்தி பரப்பும் நண்பர்களே............

அப்படி என்ன அவர்கள் உங்களுக்கு தவறு செய்து விட்டார்கள்,அதையாவது சொல்லுங்கள்.

உங்களுக்கு உண்மையில் அவர்களது மேல் தனிப்பட்ட காழ்ப்புணர்வு இருப்பின், இவ்வாறு பொதுவெளியில் அவர்களை கொல்லாமல் கொல்வது எவ்விதத்தில் நியாயம்...

நீங்கள் காயப்படுத்துவது அவர்களை மட்டுமல்ல; என்னைப்போன்ற லட்சோப லட்சம் அவர்களது ரசிகர்களையும் தான் என்பதை தயவுகூர்ந்து மறக்காதீங்க...

அவர்கள் நம்மை சிரிக்க வைத்ததை தவிர்த்து வேறு என்ன நமக்கு செய்தார்கள்....?


அவர்கள்
நம்மை சிரிக்க வைத்த பாவத்திற்காக அவர்களை அழவைத்து வேடிக்கை பார்ப்பது நலமா.....

இனியாவது....
அவர்கள் வாழும் காலம் வரை நிம்மதியாக வாழ விடுங்களேன்..

சிந்தியுங்கள்.......
நாமும் வாழனும்,மற்றவரும் வாழனும்
சந்தோசமா மட்டுமல்ல ;
நிம்மதியாகவும்.

No comments:

Post a Comment