Wednesday 23 November 2016

மைக்ரோ-மர்மங்கள்(வினிகர்)-7


இன்றைய உலகில் சமையலில் அதிகம் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாது; சமயலறை,பாத்திரங்கள் மற்றும் வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் பொருள்.

இன்று நாம் பெரும்பாலும்
பயன்படுத்தும் பாட்டிலில் அடைத்து விற்கப்படும் ஊறுகாய் பொருள்கள்
அனைத்தும் இந்த பொருள் கலக்காமல் விற்கப்படுவதில்லை.

காரணம் இது சுவையூட்டி,கிருமிகளை அண்டவிடாது, முக்கியமாக நீண்ட நாட்கள் உணவுப்பொருளை கெட்டுப்போகாமல் பாதுகாப்பாக வைத்திருக்கும்.

தொண்ணூறு சதவீதம்(90%) அமெரிக்கர்களின் வீடுகளில் நீக்கமற நிறைந்திருக்கும் பொருள் வினிகர்
என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

அந்த காலத்தில் நம்மூரில் இதனை
காடி என்பார்கள்.இப்பொழுது இந்த பெயர் தமிழ் சொல் வழக்கில் இருக்கிறதா......என்று எனக்கு தெரியவில்லை.(உங்கள் பகுதியில் இந்த சொல் வழக்கில் இருந்தால் தெரிவியுங்கள்)

என்னடா............பேரச்சொல்லாமல் பெருமை பேசுறானேனு நினைக்க வேணாம்..

இந்த பொருளின் அதாவது திரவத்தின்
பெயர் வினிகர்.

சரி நான் விசயத்திற்கு வருகிறேன்...

பொதுவாக இந்த வினிகர் நொதித்தல் முறையில் கண்ணுக்கு புலப்படாத நுண்ணுயிரிகளால் உருவாக்கப்படுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா......?


புளிப்பு சுவையினை உடைய திரவமான வினிகரின் பெரும்பகுதி அசிட்டிக் ஆசிட் மற்றும் நீரினால் ஆனது.இந்த அசிட்டிக் அமிலமே உணவிற்கு சுவையும்,உணவு கெடாமல் பாதுகாப்பையும் அளிக்கிறது.

இந்த சிறப்புமிகு அமிலத்தை உருவாக்குவது அசிட்டோபாக்டர் அசிடி(Acetobacter aceti) என்கிற பாக்டீரியா.

இது உருளைக்கிழங்கு,ஆப்பிள் சிடர் திராட்சை போன்றவற்றில் உள்ள சர்க்கரை மூலக்கூறு எத்தனால் ஆகவும் ,அதுவே பின்னர் அசிட்டிக் அமிலமாக மாற்றுகிறது.இவை அனைத்தும் ஆக்சிஜன் அற்ற நிலையில் நிகழ்கிறது.

பின்னர் இது சுத்திகரிக்கப்பட்டு வெவ்வேறு நிலைகளில் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்தப்படுத்தியாகவும், உணவுப்பொருள்களில் துணை பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நம்மூரில் பெரும்பாலும் மேல்தட்டு வர்க்கத்தினர் தான் அதிகளவில் உணவுப்பொருள்களில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

கீழ்மட்ட அளவில் ஊறுகாய்களில் காலந்தொட்டு இதன் பெயர் வினிகர் எனத்தெரியாமலேயே பயன்படுத்தப்பட்டு வருகிறது.


எது எப்படியோ....
இந்த சுவை மிகு உணவு பொருள் கெடாமல் பாதுகாக்கும் வினிகரின் உற்பத்திக்கு காரணம் நன்மை பயக்கும் பாக்டீரியா என இந்த பதிவு வாயிலாக அறிந்து கொண்டீர்கள்.

அடுத்த மைக்ரோ-மர்மங்கள் பகுதியில் இன்னொரு மர்மத்திற்கு விடை சொல்கிறேன்.

அதுவரை கொஞ்சம் காத்திருங்கள்.....

No comments:

Post a Comment