Wednesday 30 November 2016

மெல்ல மெல்ல சாகடிக்கும் சாக்லேட் .........


இனிப்பு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது......அதுவும் சாக்லேட் என்றால் சொல்லவே தேவையில்லை.

நாம் மற்றும் நம் சின்னஞ்சிறு குழந்தைகள் அன்றாடம் விரும்பி சாப்பிடும் சாக்லேட்டுகளில், நம்மை சிறுகச்சிறுக கொல்லும் செயற்கை ரசாயனப்பொருள்கள் பல மறைந்து கிடக்கின்றன.அவை பற்றியும்,அதன் விளைவுகளை பற்றியும் தான் இந்த பதிவில் காண இருக்கிறோம்.

எந்த ஒரு உணவுப்பொருளிலும் ஒரு குறிப்பிட்ட அளவில்  மட்டுமே ரசாயனப்பொருள் அனுமதிக்கப்படுகிறது.
அந்த அளவினைத் தாண்டும் பொழுது
தான்,நம் உடல் படாத பாடுபடுகிறது.

உதாரணமாக சமீபத்தில் மேகி என்கிற நூடுல்ஸ் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக காரீயம் கொண்டிருந்ததால் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

நண்பர்களே......நாம் அனைவரும்
ஒன்றை மனதில் கொள்ள வேண்டும்.
காரீயம் என்பது நமது நரம்புகளுக்கு தீங்கானது.உடல் மந்தந்தை  உருவாக்க வல்லது.குறிப்பாக குழந்தைகளின் மூளை செயல்பாட்டை வெகுவாக பாதிக்கிறது.

பொதுவாக காரீயம் போன்ற ரசாயனங்களை பயன்படுத்துவதே தவறு.இதில் அளவுக்கு அதிகம் என்றால்.... நீங்களே யோசியுங்கள் விளைவுகள் எத்தகையதாய் இருக்குமென்று........?

சரி சாக்லெட்டில் தீங்கு செய்யும் ரசாயனப்பொருள்கள் என்னென்ன இருக்கு......?



காரீயம்
காட்மியம்
தியோப்ரோமைன்
ஹை பிரக்டோஸ் கார்ன் சிரப்
பாலிகிளிசெரால் பாலிரிஸினோலியேட்
சோயா லெசித்தின்
சிஸ்டெய்ன்
செயற்கை நிறமூட்டி
செயற்கை சுவையூட்டி
வனிலின்
பொட்டாசியம் சார்பேட்
கரகீனன்
ஆல்கலாய்டு
டெர்சரி பியூட்டில்ஹைட்ரொகுயினோன்

உடம்பிற்கு இவை தரும் தொந்தரவுகள்.......

உடல் எடை கூடுதல்
பசியின்மை
டிமென்ஷியா
இதய நோய்
சர்க்கரை நோய்
கேன்சர்
வயிற்றுப்பொருமல்
குமட்டல்
வாந்தி
வயிற்றுப்போக்கு
ஒவ்வாமை
தோலில் அரிப்பு
கிட்னி பாதிப்பு
கல்லீரல் பாதிப்பு
குடலில் வாயு உருவாதல்

'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்பதற்கு ஏற்றார் போல, மேற்கண்ட ரசாயனப்பொருள்கள் அளவுக்கு அதிகமாக அடங்கிய சாக்லேட்டுகளை தொடர்ந்து சாப்பிடும் பொழுது கடும் விளைவுகளை நம் உடல் சந்திக்க நேரிடும்.

ஆகவே முடிந்தவரை தொடர்ந்து சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

பாருங்க மக்களே.......
இது போதாது என்று,போதை சாக்லெட்டுகள் வேற....

சமீபத்தில் கூட சென்னையில் போதை சாக்லெட்டுகள் விற்பதாக செய்தி வாயிலாக அறிந்தேன்.அதுவும் பள்ளிக்கூடங்கள் அருகில்.

நஞ்சு என்று தெரிந்தும், அதனை நாமே நாடிச் செல்லலாமா....... சிந்தியுங்கள்....



No comments:

Post a Comment