Friday 21 October 2016

ஜியோ இலவச சேவை அம்பேல்...


ஜியோ வாடிக்கையாளர்களே......
இது சற்று வருத்தமான சேதி தான்,
மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.

ரிலையன்ஸ்  ஜியோ டெலிகாம்
தனது 3 மாத இலவச சேவையை
டிசம்பர் 31ஆம் தேதி வரை தனது வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முழுமையாக அளிக்க வேண்டும்.ஆனால் ஜியோ தற்போது தனது இலவச சேவைகளை வருகிற டிசம்பர் 3ஆம் தேதியே முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய காட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

காரணம் TRAI சட்டதிட்டங்கள் படி எந்த ஒரு டெலிகாம் நிறுவனமும் வெல்கம் ஆபர் என்ற பெயரில் இலவச திட்டங்களை 90 நாட்களுக்கு
அதிகமாக அளிக்கக் கூடாது.

ஜியோ தனது சேவையைச் செப்டம்பர் 5ஆம் தேதி அறிவித்துள்ள நிலையில் டிசம்பர் 3ஆம் தேதியுடன் 90 நாட்கள் முடிவடைகிறது. ஆகவே
டிசம்பர் 4ஆம் தேதி முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் தற்போது பயன்படுத்தி வரும் எந்தவித இலவச சேவையினையும் பெற முடியாது .

ஜியோ நிறுவனம் தனது அதிரடி இலவச ஆஃபர் மூலமாக மட்டும் தற்போது வரை சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.

இந்த செய்தி ஜியோ நிறுவன
வாடிக்கையாளர்கள் மத்தியில்
பெரிய அதிர்வலையினை நிச்சயம் ஏற்படுத்தும்.அதனை எவ்வாறு ஜியோ நிறுவனம் சமாளிக்கப்போகிறது என்பதனை பொறுத்த இருந்து தான் பார்க்க வேண்டும்.

டிசம்பர் 4ஆம் தேதிக்கு பிறகு தான் இந்திய டெலிகாம் நிறுவனங்களுக்கு இடையே உண்மையான போட்டி ஆரம்பமாக இருக்கிறது.

ஜியோ தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்கிறதுனு பார்ப்போம்.
அதுவரை பொறுமனமே.....


No comments:

Post a Comment