Saturday 29 October 2016

ஆமை வேகத்தில் ஜியோ நெட்...


ஜியோவை பொறுத்தவரை கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை தான்.

ஜெட் வேகத்தில் இருக்கும் ஜியோ என்றார் முகேஷ் அம்பானி.ஆனால் தற்போது நம்மூர் புஷ்வானம் செல்லும் வேகம் கூட இல்லை.

நான் கூட இணைய வேகம் தொடர்பாக
ட்ராய் வெளியிட்ட தகவல் மற்ற டெலிகாம் நிறுவனங்களின் வற்புறுத்தலால் வந்ததோ என நினைத்தேன்.தற்போது தான் தெரிகிறது நூற்றுக்கு நூறு உண்மை என்று.

சரி இணைய வேகம் தான் இப்படி என்றால் போன் கால் கனெக்ட் படுமோசம்.எவ்வளவு முயன்றாலும் சில
நேரங்களில் தோல்வி தான் மிச்சம்.

குறிப்பிட்டு சொல்லனும்னா ஏர்டெல் மற்றும் வோடபோன் நெட்ஒர்க் நண்பர்களை தொடர்பு கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.

இலவசம் என்கிற பெயரால்
இந்திய மக்கள் அனைவரையும் இளிச்சவாயனாக்கும்
இவர்களை என்ன செய்வது...?
இதுக்கு மோடி ஆதரவு வேற.

எம்பி/செகண்ட்
ஸ்பீட் என்று சொல்லிட்டு கேபி/செகண்ட் வேகத்தில் இயங்கும் 4ஜி நெட்ஒர்க் தான் இந்த ஜியோ..


மற்ற நெட்ஒர்க்குகள் கொள்ளை அடிக்கின்றன என்று இவர்கள் பக்கம் சாய்ந்தால் 4ஜி என சொல்லிட்டு 2ஜியை விட மட்டமான ஆமை வேகத்தில் நெட் வழங்கினால் எப்படி?

இவர்களை கட்டுப்படுத்தவேண்டிய TRAI யோ அறிக்கை மற்றும் அபராதம் விதிப்பதோடு சரி.மக்களுக்கு சரியான வகையில் சேவை கிடைக்க இதுவரை எந்தவொரு உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

ஆமை ஒருபோதும் முயலாகாது; ஆனாலும் ஜியோ ஒருநாளேனும்
இணையவேகத்தில் முயலாக மாறும் என்கிற எண்ணத்தில் தொடர்ந்து நம்பிக்கையோடு பயன்படுத்திவரும் சாதாரண கடைக்கோடி இந்தியன்.

நீங்களும் இதுபோன்ற அனுபவத்தை பெற்று இருந்தால் உங்கள் கருத்துகளையும் பதிவு செய்யுங்கள்.

No comments:

Post a Comment