Tuesday 13 December 2016

காற்றுக்கென்ன கோபம்..



காற்றே...
உனக்கு யார் மீது தான் கோபம்...?

சென்ற வருடம் மழையாய் வந்தாய்.. இந்த வருடம் புயலாய் வந்தாய்...

ஆம்...
இத்தனை நாள் பூங்காற்றாய்
மெதுவா தானே வீசி சென்றாய்...

இன்று ஏனோ புயலாய் வந்து
எங்கள் உயிரை மட்டுமல்ல;
உடமைகளையும் யல்லவா
வாரிசுருட்டி கொண்டு சென்றாய்...

உனக்கு தலையாட்டும்
மரங்களுக்கு கூட ஏனோ
மரணத்தை பரிசளித்தாய்.....

மரணத்தை தரும் அளவிற்கு,
மரங்கள் அப்படி என்ன தான்
பாவம் செய்தன...

மரங்களில் கூடுகட்டி வாழ்ந்த பறவைகளில் எத்தனையை
பரலோகம் அனுப்பி வைத்தாயோ...

இயற்கை மனிதனை தண்டிப்பதில் நியாயமுண்டு்.
ஆனால் இயற்கை தன்னையே தண்டிப்பது ஏனோ...?

நேற்று உன் பெயர் நடா
இன்று உன் பெயர் வர்தா
நாளை உன் பெயர் என்னவோ....?

No comments:

Post a Comment