Wednesday 21 December 2016

வானவில் தேசத்திற்கு வந்த சோதனை.....




ஆப்பிரிக்க கண்டத்தின் தென் கோடியில் அமைந்திருக்கும் தேசம்..

உலகில் அதிகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் இயற்கை நிரம்பிய அழகிய தேசம்...

பல்வேறு இனத்தவர் மற்றும் மொழியினர் வாழும் வானவில் தேசம்..

நம் நாட்டு தேசத்தந்தை காந்தியை, அரசியலில் இறங்கி வெள்ளையனை எதிர்த்து போராட தூண்டிய தேசம்...

ஒரு காலத்தில் நிறவெறியால் இருளில் மூழ்கியிருந்து,இன்று மற்ற நாடுகளுக்கே முன்னுதாரணமாக விளங்கும் நாடு...

வைரம் அபரிமிதமாக நிறைந்திருக்கும்  தேசம்...

ஆம்...நான் சொல்வது
தென்னாப்பிரிக்கா தான்.....



இத்தகைய சிறப்புமிகு தேசத்தின் இன்னொரு முகத்தை உங்கள் பார்வைக்கு கொண்டுவரவே இந்த பதிவு...

சரி...நான் விசயத்திற்கு வருகிறேன்..

இந்த வானவில் தேசத்தின் மக்கள் தொகை ஐந்தரை கோடி.இந்த ஜனத்தொகையில் 10% பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா...?

நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். காரணம்,புள்ளிவிவரங்கள் அனைத்தும் இதனை மெய்ப்பிக்கும் விதமாக உள்ளன.

2013ம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுக்க நாற்பத்து நான்கு மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.அவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள்.

உலகளவில் எய்ட்ஸ் நோய்த்தாக்கம் அதிகம் உள்ளோர் ஆப்பிரிக்க நாடுகளான சுவாசிலாந்து,லெசோதோ போட்ஸ்வானா மற்றும் தென்னாப்பிரிக்கா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

2013ம் ஆண்டு & 2015ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி தென்னாப்பிரிக்காவில் மட்டும் முறையே 2,60,000 & 1,62,445 பேர் HIV நோய்தாக்குதலுக்கு உள்ளாகி,அது தொடர்புடைய நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.இது அந்த நாட்டில் இறந்தோரில் 30% என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
HIV நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களில் 59% கர்ப்பிணி பெண்களே.

குறிப்பாக தென்னாப்பிரிக்காவில் பள்ளி செல்லும் சிறுமிகள் சுமார்
28% இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிச்சிறார்கள் 4% என்றளவில்
இந்த கொடிய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2011ம் ஆண்டு புள்ளிவிவரங்களின் படி, தென்னாப்பிரிக்காவில் பள்ளி செல்லும் பெண் பிள்ளைகள் சுமார் 94000 பேர் கருவுற்று இருந்ததாகவும்,
இதில் 77000 பேர் கருக்கலைப்பு செய்துள்ளதாகவும்,தகவல்களை
வெளியிட்டு தன் அதிர்ச்சியினை வெளியிட்டுள்ளார் அந்த நாட்டு சுகாதார துறை அமைச்சர்.

இதில் இருந்தே,அந்த நாட்டில் பெண்
மற்றும் ஆண் குழந்தைகள் எவ்வாறு எளிதில் இந்த முறையற்ற தகாத உடலுறவால்,இந்த கொடிய நோய்த்தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள் என்று புரியும்.

எய்ட்சினால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளின் நோய்த்தொற்றுக்கு காரணமே, ஏற்கனவே இந்த எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட அவர்களின் தாய்மார்கள் என்பது தான் மிகவும் வேதனையிலும்
வேதனை.

தாய்மார்கள் தெரிந்தோ,தெரியாமலோ, தாங்கள் கருவில் சுமக்கும் சிசுவுக்கும், இந்த பெறப்பட்ட நோய் எதிர்ப்பு குறை நோயினை கடத்திவிட்டு இறந்து போகிறார்கள்.

ஒருபக்கம் இந்தநாடு இந்த AIDS
நோயில் இருந்து மக்களை மீட்க பல
முயற்சி செய்தாலும்,பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை என்னவோ
குறைந்தபாடே இல்லை.

குறிப்பாக ஆணுறை(condom)
பயன்படுத்த சொல்லி தென்னாப்பிரிக்கா அரசு
எவ்வளவோ மக்களை எச்சரித்து
வற்புறுத்தினாலும்,மக்கள் ஆணுறை
பயன்படுத்த மறுத்து எய்ட்ஸ் நோய்த்தாக்குதலுக்கு உள்ளாவதாக தொடர் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உலகளவில் ART என்று அழைக்கப்படும் ரெட்ரோ வைரஸுக்கு எதிரான மருந்து சிகிச்சை அதிகளவில் நடைமுறையில் உள்ளது,இந்த தென்னாப்பிரிக்காவில் தான்.

பாதுகாப்பற்ற உறவை தவிர்த்தாலே பல நன்மைகள் வானவில் தேசத்திற்கு
வந்து சேரும் என்பதே நிதர்சனம்.

No comments:

Post a Comment