நம் நாட்டில் அரசியல் வாதிகள் என்றாலே முகம் சுளிக்கக்கூடியவர்களாவே இருக்கிறார்கள்.காரணம் அவர்கள் செயல்பாடுகளே...
வெகுசிலரே இதில் விதிவிலக்காக
நம் பார்வைக்கு நட்சத்திரங்களாக
ஜொலிக்கிறார்கள்.
அவர்களில் ஒருவரே இவர்...
இந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் முழுக்க முடங்கியதன் மூலம்
ஏராளமான மக்களின் வரிப்பணம் வீணாகிப்போனது அனைவரும் அறிந்ததே...
இப்படி வீணாகிப்போன வரிப்பணத்திற்கு ஈடு செய்யும் விதமாக, முடங்கிப்போன பாராளுமன்ற நாள்களில் தான் கலந்து கொண்டதற்காக தனக்கு
வழங்கப்பட்ட சம்பள படியை திரும்ப ஒப்படைத்திருக்கிறார் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்றால்
நம்ப முடிகிறதா...?
அதுவும் நம் நாட்டில்....
பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெறாமல் சலுகைகளை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்களை
பார்த்திருக்கோம்...
ஒருவேளை பாராளுமன்ற நடவடிக்கைகளில் பங்கு பெற்றாலும், கூச்சல் போட்டு அமளியினை உருவாக்கும் அரசியல் வாதியை பார்த்திருக்கிறோம்...
ஆனால்,தான் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிற இந்த 16
ஆண்டுகளில் இது நாள் வரை,ஒரு முறை கூட பாராளுமன்றத்தில்
அமளியில் ஈடுபட்டதில்லை.
தவிர்க்க முடியாத காரணங்களை விடுத்து,தன்னால் முடிந்த அளவு பாராளுமன்ற கூட்டத்தொடர்களில் பெரும்பாலும் ஆஜராகி விடுகிறார்.
தன் தொகுதி பிரச்சனைகளுக்காக மக்கள் எளிதில் அணுக கூடிய எளிய படித்த பண்பாளர்.
இவர் வேறு யாருமில்லை.
பிஜு ஜனதா தளக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்
திரு.பைஜெயந்த் ஜெய் பாண்டா(
ஒடிஷாவின் கேண்டர்பரா )அவர்கள்.
மக்களை நேசிக்கும் இவரை பாராட்டுவோம்....
No comments:
Post a Comment