'ஒண்ணுமே புரியல உலகத்திலே, என்னமோ நடக்குது மர்மமா இருக்குது' இந்த பாடல் வரிகள் யாருக்கு பொருந்துதோ இல்லையோ, நம் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணத்திற்கு பொருந்தும் போல....
ஆமாங்க.... மறைந்த அவரது முகத்தின் ஒருபக்கத்தை உற்றுநோக்கி பார்த்தால் நான்கு புள்ளிகள் அழுத்தமாக தெரிகிறது(இது எம்பார்மிங் என்று சொல்லக்கூடிய இறந்த உடலை பதப்படுத்தும் ஒரு வித முறையாம்).
இது போன்ற தகவல் அடங்கிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
இந்த புகைப்படம் உண்மையிலேயே சந்தேக கேள்விகள் பலவற்றை எழுப்புகிறது.ஆகவே,இதன் உண்மைத்தன்மையினை சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக தமிழக மக்களுக்கு தெரியப்படுத்தி, இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
வைக்க வேண்டும்.ஏனென்றால் அதுதான் அவர்களது கடமையும் கூட.
இந்த சர்ச்சைக்கு சம்பந்தப்பட்டவர்கள்
மர்மப்புள்ளிகளுக்கு விடை கொடுத்து,
முற்றுப்புள்ளி வைப்பார்கள் என உங்களை போல்,நானும் காத்துக்கொண்டிருக்கிறேன்....
நிறைவேற்றுவார்களா....?
No comments:
Post a Comment