இனி பணமில்லா பரிவர்த்தனைக்கு நமது ஆதார் எண் மற்றும் கைரேகையே போதுமானது.
ஆமாங்க...
ஆதார்-பே (aadhaar pay) எனப்படும்
ஆதார் எண் மற்றும் கைரேகையை மட்டும் பயன்படுத்தி ரொக்கமில்லாத
பணப் பரிவர்த்தனை செய்யும் புதிய முறையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதற்கு இணையதள இணைப்போ, ஸ்மார்ட்போனோ தேவையில்லை. மாறாக,ஆதார் எண் மற்றும் கைரேகையை கொண்டு
நம்மால் பணத்தை செலுத்தவோ,
பெறவோ முடியும்.
14 தேசிய வங்கிகள் இதுவரை
இந்த திட்டத்தில் இணைய இசைவு தெரிவித்துள்ளதாகவும்,ஆகவே
விரைவில் இந்தியா முழுக்க இந்த
ஆதார்-பே நடைமுறைக்கு வரும் எனத்தெரிகிறது.
எது எப்படியோ....
மக்களுக்கு துயர் தராத எந்த திட்டமும் வரவேற்புக்குரியதே.
No comments:
Post a Comment