Sunday 22 January 2017

நாளை நமதே....


நம் கலாச்சார அடையாளமான ஜல்லிக்கட்டை காக்க ஒரு போதும்
நாம் பின்வாங்கவே கூடாது.

இன்று மாலையில் இருந்து,சமூக வலைத்தளங்கள் மூலம் ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லி, நம் நெடிய போராட்டத்தை நீர்த்து போகச்செய்ய முனைந்துள்ளனர்.

அதனை ஒரு போதும் நாம்
கருத்தில் கொள்ளாது,நாம்
நினைத்த காரியத்தை சாதிக்கும்
வரை தொடர்ந்து போராட வேண்டும்.

நம்மை ஆளும் அரசாங்கங்களை
அடிபணிய வைப்போம்...நம் மக்களின் காலடியில்.

ஒருவார காலமாக போராடும் தாய் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தற்போதைய தேவை முழுமையான வெற்றியே.....

அத்தகைய முழுமையான வெற்றி
பெற நமது ஒரே இலக்கு,
ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டில்
தலைமுறை தலைமுறையாய்
தொடர உதவும் நிரந்தர சட்டம்.

அந்த சட்டத்தை (PCA act) மத்திய அரசு நிறைவேற்றும் வரை நாம் முன்வைத்த கால்களை,பின்வாங்கும் பேச்சிற்கு இடம்கொடாது வீறுநடை போட வேண்டும்.

பொறுத்தார் பூமியாள்வார்....
அதற்கான காலமும் கனிந்து கொண்டிருக்கிறது.

நமது தற்போதைய ஒரே இலக்கு ஜல்லிக்கட்டு மட்டுமே...
அதை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்..........

1 comment: