பத்து மாதம்
தன்னை மறந்து
நம்மை சுமந்தவள்.
நம் விரல் பிடித்து,
நடை பழக்கியவள்.
ஆகாய நிலா காட்டீ....
நம் வாயுக்குள் சோறூட்டியவள்.
அத்தனை துன்பத்தை
தன்னுள் புதைத்து,நம்மை
இடுப்பில் வைத்துக்கொண்டு
இன்முகம் காட்டுபவள்.
அவளை நினைக்கையில், ஆயிரமாயிரம் வார்த்தைகள் கண்ணீராய் உருண்டோடும்....
அத்தகைய தாய்
இன்று மட்டுமல்ல.....என்றும் போற்றுதலுக்கு உரியவளே...
உண்மையில்....
அன்னையை நேசிக்கும்
நாம் அனைவருக்கும்
இன்று மட்டுமல்ல....
எல்லா நாளும் அன்னையர் தினமே.
அன்னையரை போற்றுவோம்....
No comments:
Post a Comment