Saturday 25 February 2017

எச்சரிக்கை...!!!!..நீங்கள் குடிப்பது உண்மையில் பாலா...?


நண்பர்களே.....இன்று உலகம் முழுக்க மனித ஊட்டச்சத்து தேவைக்காக பாலின் தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது.

அத்தகைய தேவையினை தவறான வழியில் தங்களுக்கு சாதகமாக்கி கொள்ளும் பணம் திண்ணும் ஆசாமிகள் உலகம் முழுக்க உண்டு.

அத்தகைய ஆசாமிகளால் உருவானதே மனிதனை மெல்லக்கொல்லும் இந்த
செயற்கை கலப்பட பால்.

ஆமாங்க....நாம் பால் என்கிற பெயரில் அன்றாடம் குடிப்பது உண்மையில் இயற்கையான பால் இல்லை.
மாறாக செயற்கையான கெமிக்கல் நிறைந்தவை.

இதை சாப்பிட்டால் குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஊட்டச்சத்து கிடைக்கிறதோ, இல்லையோ.....உடம்பை பாழ் படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி குறைவை உருவாக்கும் என்பது என்னவோ நிச்சயம்.

சரி.....அப்படி என்ன கெமிக்கல் சேர்க்கிறாங்கனு பார்ப்போம்...

borax
boric acid
benzoic acid
salicylic acid
ammonium sulphate
Salt
Glucose
Starch
Hydrogen peroxide
Sodium carbonate
Sodium bicarbonate
Sodium hydroxide

மேலே உள்ள கெமிக்கல் யாவும்,பால் வெண்மைக்காகவும் ,சுவைக்காகவும், கெட்டித்தன்மைக்காவும், கொழுப்பிற்காகவும் என பல காரணங்களுக்காக பாலின் உண்மைத்தன்மையினை நிரூபிக்க வேண்டி செயற்கையாக சேர்க்கிறார்கள்.

இத்தகைய ரசாயனங்கள் யாவும் உடலுக்கு மோசமான தீங்கினை விளைவிப்பவை என்பதை மறக்காதீங்க...

காலம் மாற மாற,நாமும் போலியான கலப்பட பால் தான் உண்மையான பால் என நம்பி அறியாமையினால் குடித்து வருகிறோம்.

இனியாவது இயற்கையான பாலினை தேடிப்பிடித்தாவது குடிக்க முயற்சி செய்வோம்.

என்ன கொஞ்சம் விலை அதிகமாக இருக்கும்.கொஞ்சம் யோசியுங்கள்...?நம் உடம்பை விடவா விலை முக்கியம்.

சரி காசு இல்லையா...? அத்தகைய செயற்கை கலப்பட பாலை குடித்து உடம்பை பாழாக்குவதற்கு பதில்,
குடிக்காமல் இருப்பது உத்தமம்.

No comments:

Post a Comment