நம் முன்னோர்கள் இயற்கையோடு இணைந்து வாழ்ந்து,தங்களது
ஆயுளை பெருக்கிக்கொண்டனர் என்பதற்கு உதாரணம் தான்,
அவர்கள் சிந்தனையில் உருவான
இந்த மருந்துப்பொடி.
அப்படி என்ன அது என
கேட்குறீங்களா....?
அதுதாங்க.....திரிபலா.
நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் ஆகிய மூன்றும்
சேர்ந்த கூட்டுப்பொருள் தான்
திரிபலா மருந்துப்பொடி.
இதனை தனித்தனியாக வாங்கி, வெயிலில் காயவைத்து இடித்து,பொடி செய்து பயன்படுத்தலாம். இல்லையென்றால் கடைகளில் நேரடியாக திரிபலா பொடியினை கேட்டு வாங்கி பயன்படுத்தலாம்.
இதனால் நம் உடம்பிற்கு என்ன பயன்....?
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
இதயநோய்கள் வராமல் தடுக்கிறது.
செரிமானக் கோளாறுகளைச் சரி செய்கிறது.
முதுமையைத் தாமதப்படுத்துகிறது.
மலமிளக்கியாக(laxative) செயல்படுகிறது.
புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடுகிறது.
உடலில் உள்ள நச்சுப்பொருட்களை
(toxins) நீக்குகிறது.
வயிற்றில் உள்ள புழுக்களை(worms) வெளியேற்ற உதவுகிறது.
வயிற்றுப்புண்ணை சரி செய்கிறது.
ரத்தசோகையை சரி செய்கிறது.
ரத்த ஓட்டத்தைச் சீராக்குகிறது.
உடலில் அல்சரை கட்டுப்படுத்தும்.
ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.
தலைவலியைக் குணப்படுத்தும்.
உடலில் குளூகோஸின்(glucose) அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
உடலில் கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கும்.
உடல்பருமனைக் கட்டுப்படுத்தும்.
ரத்தத்தை சுத்திகரிக்கும்.
தோல் நோய்கள் வராமல் காக்கும்.
உணவுப் பாதை நச்சுப்பொருட்களை நீக்குகிறது.
தொற்று நோய்கள் வராமல் காக்கும்.
குடல் இயக்கத்தைச் சீராக்குகிறது.
சைனஸ் நோயைத் தீர்க்கும்.
உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை சீராக்கும்.
ரத்தத்தில் RBC எண்ணிக்கையை அதிகரிக்கச்செய்கிறது. .
கண்பார்வைக் கோளாறைச் சரிசெய்யும்.
திரிபலாப் பொடியை எப்படி சாப்பிடலாம்......?
சுடுதண்ணீரில் கலந்து சாப்பிடலாம்.
தேன் கலந்து சாப்பிடலாம்.
நெய்யுடன் சேர்த்து சாப்பிடலாம்.
மோருடன் கலந்து சாப்பிடலாம்.
நீருடன் கலந்து சாப்பிடலாம்.
மேலே சொன்னவை யாவும்,
என் அறிவுக்கு எட்டியவையே....
எது எப்படியோ.....இந்த பதிவு
திரிபலா பற்றிய ஒரு புரிதலை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும்,
என நான் நம்புகிறேன்.
No comments:
Post a Comment