இந்த கொடூரமான செய்தி கேட்ட
நேற்று இரவில் இருந்து எனக்கு
சரியாக தூக்கம் வரவில்லை.
அப்படி என்ன செய்தி கேட்குறீங்களா.....?
செய்தி இது தான்....
கடந்த 5-2-2017 ம் தேதி,சென்னை போரூர் அருகே 7 வயது சிறுமி ஹாஷினி காணாமல் போனதாக முகநூல் பக்கங்களில் செய்தி வெளியானது.
தற்போது அந்த சிறுமி,பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இந்த படுபாதக செயலில் ஈடுபட்டதாக
தன்வந்த் என்கிற IT ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போரூர் அருகேயுள்ள மதனந்தபுரம் மாதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் பாபு- ஸ்ரீதேவி தம்பதியினரின் மகளான ஹாஷினி இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த அந்தச் சிறுமி காணாமல் போனதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக,அதே குடியிருப்பில் மேல்தளத்தில் வசித்து வந்த தன்வந்த் என்பவரிடம் போலீசார் விசாரித்த போது,அவர் முன்னுக்கு பின் முரணாகப் பேசியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் தீவீர விசாரணையில் இறங்கிய போது, சிறுமி ஹாஷினியை தான் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், தலையணையால் அழுத்திக் கொலை செய்ததாக ஒத்துக்கொண்டிருக்கிறான்.
பின்னர் சிறுமி ஹாஷினி உடலை தாம்பரம் - மதுரவாயல் புறவழிச்சாலைக்கு எடுத்துச் சென்று, பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாகவும் சொல்லியிருக்கிறான் நெஞ்சில் ஈரமில்லா கொலைகாரப்பாவி.
இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர்,எரிந்த நிலையில் கிடந்த ஹாஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதனையடுத்து தன்வந்தை போலீசார் கைது செய்தனர்.
சில நிமிட உடல் இச்சைக்காக ஒரு இளந்தளிரை எரித்து நாசமாக்கிய கேடுகெட்ட இந்த மனிதனல்லா மிருகத்தை,என்ன செய்யலாம்...
நீங்களே சொல்லுங்க...?
நெஞ்சு பொறுக்கவில்லை....
இந்த மனநிலை கெட்ட
மானிடனை நினைத்துவிட்டால்.
ஏ....இறைவா....
நீ எங்கேனும் இருந்தால்....
இனியாவது இந்த பிஞ்சுகளின் கண்களுக்கு காட்டு........
மனிதனில்
நல்லவர் யார்....?
கேடுகெட்டவர் யார்...? என்று.
No comments:
Post a Comment