Sunday 19 February 2017

மூன்று கோடிக்கு ஏலம் போன தமிழகத்தின் குக்கிராம கிரிக்கெட் வீரன்


10வது vivo ஐ.பி.எல் T20 கிரிக்கெட் போட்டி எதிர்வரும் ஏப்ரல் 5ம் தேதி முதல் மே 21ம் தேதி வரை பல்வேறு இந்திய நகரங்களில் நடக்கிறது.

இதையொட்டி ஐ.பி.எல். வீரர்களின் ஏலம் பெங்களூரில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி,தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில் தமிழகத்தின்,சேலத்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளரான T.நடராஜனை எடுக்க பல்வேறு அணிகளும் போட்டி போட்டன.

அதிலும் குறிப்பாக புனே, டெல்லி, பஞ்சாப், கொல்கத்தா, ஐதராபாத் ஆகிய அணிகள் முட்டி மோதின.

இறுதியில் மூன்று கோடிக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது  KXI பஞ்சாப் அணி.

இவர் சமீபத்திய தமிழ்நாடு ப்ரீமியர்
லீக் கிரிக்கெட்டில்,ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையிலான
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் நடராஜன்.....

No comments:

Post a Comment