Saturday 17 September 2016

அர்த்தமுள்ள சம்பவம்-2


ஒரு முதலாளிக்கு தனது கம்பெனியின் முக்கியமான பதவிக்கு யாரை நியமிப்பது என்கிற மிகப்பெரிய குழப்பம்.ஒருவழியாக நேர்காணலுக்கு ஏற்பாடு செய்தார்.
மூன்று பேர் நேர்காணலுக்கு ஒரே தகுதியுடன் வந்திருந்தனர்.மூன்று பேரையும் தனித்தனியாக அழைத்து ஒரே கேள்வியை முன்வைத்தார்.
அதாவது இன்று மதுரை எக்ஸ்பிரஸ் தாமதமாக போகும்னு சொல்றாங்க அதை விசாரிச்சு சொல்லுங்க என்று.

உடனே முதலாம் நபர் வந்தார்.பத்து நிமிடம் தாமதமாகுமாம்,போனில் கேட்டேன் என்றார்.

அரைமணி நேரம் கழித்து இரண்டாம் நபர் வந்தார்.ஏதோ விபத்தாம் அதான் தாமதம்,நான் ஸ்டேஷன்ல விசாரிச்சேன் என்றார்.

மூன்றாவது நபர் ஒரு மணிநேரம் கழித்து வந்தார்.அய்யா வண்டி தாமதமாக தான் போகுது.அதே நேரம் பாண்டியன் எக்ஸ்பிரஸ் சரியான நேரத்துக்கு போகுது. டிக்கெட் கூட இருக்கு உங்களுக்கு புக் பண்ணனும்னா புக் பண்ணலாம் அய்யா என்றார் விவரமாக.

நீங்களே சொல்லுங்கள் இந்த மூவரில் யாருக்கு அந்த முக்கியமான பதவியை வழங்கியிருப்பார் என்று ?

வேற யாருக்கு அந்த
மூன்றாவது நபருக்கு தான்....

முழுமையாக தெரிந்தவனுக்கே எங்கும் முன்னுரிமை மறந்துடாதீங்க.
மூன்றாவதாக வந்தாலும்....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment