சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான இருமுகன் வேகமாக வசூலை குவித்து வருவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
குறிப்பாக கடந்த வியாழக்கிழமை முதல் தமிழ் மற்றும் தெலுங்கில் உலகம் முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது.
தற்பொழுது நான்கு நாட்கள் முடிவில் அதிகாரபூர்வமாக வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது அதன் படி
51.19 கோடி ரூபாய் இதுவரை வசூல் செய்துள்ளது. இதன் மூலம் சியானின் மார்க்கெட் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
விரைவில் 100 கோடி வசூல் படங்கள் வரிசையில் நிச்சயம் இணையும் என்பது தற்போதைய நிலவரம் என்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்.
எது எப்படியோ சீயான் உழைப்புக்கு இன்று தான் விமர்சனங்களை தாண்டி வெற்றி கிடைத்துள்ளது.
No comments:
Post a Comment