Saturday 10 September 2016

மானம் காத்த மாரியப்பன்

                              தங்கமகனே....


ஊனம்
ஒரு குறையில்லை என
உலகிற்கு உணர்த்திவிட்டாய்.....

ஏளனம் செய்தவர்கள் வாயில்
இனிப்பு அல்லவா
போட்டு விட்டாய்.....

பெற்ற தாய்க்கு
மட்டுமல்ல
பாரதத்தாய்க்கும்
பெருமை சேர்த்துவிட்டாய்......

இன்று காலை
ஒவ்வொரு இந்தியனின் தங்கத்தாகத்தை
தணித்துவிட்டாய்.....

தமிழ்த்தாய் பெற்றெடுத்த
தங்கமே
உன்னை நினைத்து
தமிழனாய்
தலைநிமிர்கிறேன்....


குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

No comments:

Post a Comment