தம்பி
இந்த வயதில்
தாயை
தவிக்கவிடலாமா....
உன் முகம் பார்த்தால்
காவிரித்தாய் கூட
கண்ணீர் வடிப்பாளே...
உன் நோக்கம் பெரிது
அதற்காக
உன் உயிருக்கே
உலை வைக்கலாமா...
ஏனடா தம்பி
மீண்டும் ஒரு முத்துகுமாராய் மாறிப்போனாய்...
உரிமைக்காக
உன்னையே
தீயில் உருக்கியது ஏனோ....
வாழ வேண்டிய வயதில்
ஏன்
வாக்கரிசிக்கு ஆசைப்பட்டாய்...
மற்றவர்க்கு
முன்னுதாரணமாய்
இருக்கவேண்டிய நீ
முன்னே செல்லலாமா....
தண்ணீருக்காக போராடி
எங்களை
கண்ணீரில் அல்லவா
மிதக்க விட்டுவிட்டாய்....
இந்த காவிரியின்
பெயரால்
இன்னும் எத்தனை காவோ.....
தம்பி விக்னேஷிற்கு
என் வீரவணக்கம்.
குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment