ஆன்லைனில்
அதிகம் சம்பாதிக்கலாம் என
ஆசை காட்டுவார்கள்...
ஒரு மணியில் ஓராயிரம்
ஒரு நாளில் ஒரு லட்சம் என்று...
மயங்கி விடாதீர்கள்
அந்த
மாயாஜால வார்த்தைக்கு....
பதிவுக்கு பணம் கேட்டால்
பதிலாக
மறுத்து விடுங்கள்....
உங்கள் முதலீடு
மூளையாக இருக்க வேண்டும் முன்பணமாக இருக்கக்கூடாது....
ஆன்லைனிலில்
ஆயிரம் தளங்கள் இருந்தால்..
அதில்
பத்து சதவீத தளங்களே
பணம் தருகின்றன
அதுவும் மிக அரிதாக...
புதிய
சம்பாதிக்கும் தளங்கள்
புற்றீசலாய் கிளம்பும்...
பயன்படுத்தியிருந்தால்
பயன் பற்றி
பகிர்ந்து கொள்ளுங்கள்
பக்கத்து நண்பனுக்கு.....
பகிர்ந்து கொண்டால்
பணம் சம்பாதிக்கலாம்
என்று
இன்னொரு கூட்டம்...
பயனில்லாததை பகிர்ந்து
சக நண்பனின்
பகையை சம்பாதிக்காதீர்கள்...
அவசியமில்லை என்றால் ஆன்லைனிலில்
அதிகநேரம் செலவழிக்க வேண்டாமே...
எச்சரிக்கையாக இருங்கள்..
கழுகு போல
காத்திருக்கிறார்கள்.
குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment