குருவிடம் ஒருவன் வந்து அய்யா எனக்கு வாழ்க்கை முழுவதும் பிரச்சினையாக இருக்கு ஆகவே இந்த பிரச்சனையில் இருந்து விடுபட ஒரு வழி சொல்லுங்க சாமி என்றான்.
உடனே குரு சிரித்தார்.பின்னர் கொஞ்சம் யோசித்துவிட்டு சரி என்னுடன் நீ வா,நான் உனக்கு பிரச்னையில்லாத மனிதர்களையும், இடத்தையும் காட்டுகிறேன் என அழைத்து சென்றார் .
அவனுக்கு ஒன்றும் புரியல எங்கு கூட்டி செல்கிறார் என்று.
கொஞ்சநேரத்தில் அவன் அதிர்ச்சியாகி விட்டான்.காரணம் குரு கூட்டிச்சென்ற இடம் கல்லறைத்தோட்டம்.
உடனே குரு அவனை ஆசுவாசப்படுத்தி அவனிடம்,இந்த கல்லறைக்குள் இருக்கும் மனிதர்களுக்கு தான் பிரச்சனையே கிடையாது.
அவ்வாறு உனக்கு இருக்க விருப்பமா ? விருப்பம் என்றால் சொல் என்றார் பாருங்கள். தலைதெறிக்க ஓடியே போய்விட்டான் அவன்.
நீங்களே சொல்லுங்க பிரச்சனை இல்லாத மனிதன் யாராவது இருக்கிறானா?
குறிப்பு: உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
No comments:
Post a Comment